News February 18, 2025

பள்ளிகளில் இருந்து நீக்கப்படும் கடிகாரங்கள்!

image

கடினமான விஷயங்களை பிள்ளைகள் கஷ்டப்பட்டாவது புரிந்து கொள்ள வேண்டும் என பெற்றோர்களும், ஆசிரியர்களும் எண்ணிய காலம் மலையேறி விட்டது. அதற்கு உதாரணமாக, பிரிட்டனில் உள்ள பள்ளிகளில் இருந்து முள் கடிகாரங்கள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக டிஜிட்டல் கடிகாரங்கள் மாட்டப்படுகின்றன. தேர்வின் போது முள் கடிகாரத்தில் டைம் பார்க்க மாணவர்கள் திணறுவதால் இந்த முடிவாம். சரி., நீங்க என்ன டைம் என சொல்லுங்க பார்ப்போம்.

Similar News

News September 13, 2025

மத்திய அரசில் 1,543 வேலைவாய்ப்பு!

image

மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேஷனில், களப்பொறியாளர், கள மேற்பார்வையாளர் பணிகளுக்கு 1,543 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, எலெக்ட்ரிக்கல்/சிவில் பிரிவுகளில் பி.இ., பி.டெக்., பி.எஸ்சி. (பொறியியல்) பட்டமும், 1 வருட அனுபவமும் அவசியம். இதற்கு, மாதம் ₹30,000-₹1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும் இந்த வேலைக்கு செப்.17-க்குள் https://www.powergrid.in/en -ல் விண்ணப்பியுங்கள். SHARE பண்ணுங்க.

News September 13, 2025

BCCI புதிய தலைவர் இவரா?

image

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோரே அடுத்த BCCI தலைவர் என தகவல் கசிந்துள்ளது. சமீபத்தில் ரோஜர் பின்னி BCCI தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். வரும் 28-ல் BCCI தேர்தல் நடப்பதாக இருந்தது. ஆனால், அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களும் கிரண் மோர் வரவையே ஆமோதித்ததாக கூறப்படுகிறது. இந்திய அணிக்காக 49 டெஸ்ட், 94 ஒருநாள் போட்டிகளில் கிரண் மோர் விளையாடியுள்ளார்.

News September 13, 2025

ஓய்வு பெறும் வரை ‘O’ மட்டும் தான்: EPS தாக்கு

image

தமிழகத்தில் போதைப் பொருளை கட்டுப்படுத்தாமல் ஓய்வு பெறும் வரை ‘ஓ’ (2.0, 3.0) போட்டவர் முன்னாள் டிஜிபி என EPS விமர்சித்துள்ளார். திருப்பூர் பரப்புரையில் பேசிய அவர், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுத்து நிறுத்துவோம் என வாக்குறுதி அளித்துள்ளார். மக்கள் எப்படி போனாலும், தன் குடும்பத்தினர் செல்வாக்காக வாழ வேண்டும் என்பதே முதல்வரின் நோக்கம் என்றும் சாடினார்.

error: Content is protected !!