News January 23, 2025
எவரெஸ்ட் ஏறுவது இவ்வளவு காஸ்ட்லியா!

எவரெஸ்ட்டில் ஏறுவதற்கான கட்டணத்தை, நேபாள அரசு 36% அதிகரித்துள்ளது. பாப்புலர் சீசனான ஏப்-மே மாதங்களில், சிகரத்தில் ஏற ரூ.9.5 லட்சமாக இருந்த கட்டணம், ரூ.12.9 லட்சமாக (35%) உயர்த்தப்பட்டுள்ளது. செப்-நவ சீசனில் ரூ.6.4 லட்சம், டிச-பிப் சீசனில் ரூ.3.2 லட்சம் எனக் கட்டணம் உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு 300 பேர் எவரெஸ்ட் சிகரம் ஏறுகின்றனர். சாகசம் செய்யக் கூட நிறைய செலவு பண்ணனும் போல இருக்கே!
Similar News
News December 1, 2025
BREAKING: அமளியால் முடங்கிய லோக்சபா

எதிர்க்கட்சி MP-க்களின் அமளியால் லோக்சபா பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. SIR நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, TMC, SP உள்ளிட்ட கட்சிகளின் MP-க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். முன்னதாக, குளிர்கால கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என <<18436891>>PM மோடி<<>> வலியுறுத்தியிருந்தார்.
News December 1, 2025
துரோகத்தின் சம்பளம் மரணம்.. மனைவி சடலத்துடன் Selfie!

இறந்த மனைவியின் உடலுடன் Selfie எடுத்து, ‘துரோகத்தின் சம்பளம் மரணம்’ என கணவர் ஸ்டேட்ஸ் வைத்த சம்பவம் அதிரவைத்துள்ளது. நெல்லையை சேர்ந்த பாலமுருகன், ஸ்ரீபிரியாவிற்கு திருமணமான நிலையில், ஸ்ரீபிரியா வேறொருவருடன் பழகுவதாக பாலமுருகன் குற்றம்சாட்டினார். இதனால், ஸ்ரீபிரியா கோவையிலுள்ள ஹாஸ்டலில் தனியாக வசித்து வந்துள்ளார். அவரை அழைக்க சென்ற போது நடந்த தகராறில், பாலமுருகன் ஸ்ரீபிரியாவை கொலை செய்துள்ளார்.
News December 1, 2025
கண்ணாடி பாட்டில் மூடியில் 21 மடிப்புகள் இருப்பதன் காரணம்!

இங்கு காரண காரியம் இன்றி எதுவும் கிடையாது. கண்ணாடி ஜூஸ் பாட்டில்கள் & பீர் பாட்டில் 21 மடிப்புகள் இருப்பதற்கும் காரணம் உண்டு. சோடாக்களில் அதிக கார்பன் டை ஆக்சைடு இருப்பதால், கண்ணாடி பாட்டில் அந்த அழுத்ததை தாங்க, மூடி இறுகலாக இருக்க வேண்டும். இதனால், பல கட்ட சோதனைக்கு பிறகு, 21 மடிப்புகள் இருந்தால் மட்டுமே மூடி அழுத்தமாக இருக்கும் என கண்டறியப்பட்டு சர்வதேச அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


