News May 17, 2024
காலநிலை மாற்றம் மூளையைப் பாதிக்கும்

காலநிலை மாற்றம் மனித மூளையில் எதிர்மறையானத் தாக்கத்தை ஏற்படுத்துவதாக லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வானிலை நிகழ்வுகள் தீவிரமாகவும், அடிக்கடியும் நிகழும்போது, நரம்பியல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதாகக் கூறப்படுகிறது. வெப்ப அலைகளின் போது பக்கவாதம், மனநலப் பிரச்னை தொடர்பான சேர்க்கை மருத்துவமனைகளில் அதிகரிப்பதோடு, இறப்பு விகிதம் அதிகரிப்பதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Similar News
News October 27, 2025
பண்ணையார் கூட பஞ்சாயத்துக்கு வருவார்: சீமான்

கரூர் துயரில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை பனையூருக்கு அழைத்துள்ள விஜய், தேர்தலின்போதும் வாக்குப்பெட்டியை பனையூரில் வைத்து, அங்கு வந்து வாக்களிக்க சொல்வாரா என சீமான் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார். பண்ணையார் கூட பஞ்சாயத்துக்கு வருவார், ஆனால் பனையூர் பஞ்சாயத்து என் (விஜய்) வீட்டில் தான், ஆலமரத்துக்கு வர மாட்டேன் என்றும், இது நாட்டாமையை தாண்டிய நாட்டாமையாக உள்ளது எனவும் விமர்சித்துள்ளார்.
News October 27, 2025
FLASH: மீண்டும் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்

கடந்த வெள்ளிக்கிழமை சரிவுடன் நிறைவடைந்த இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று(அக்.27) ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 245 புள்ளிகள் உயர்ந்து 84,457 புள்ளிகளிலும், நிஃப்டி 62 புள்ளிகள் உயர்ந்து 25,858 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. Kotak Mahindra, HDFC Bank, ICICI Bank, Tata Steel உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தில் உள்ளதால் அவற்றில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
News October 27, 2025
இன்று விசாரணைக்கு வரும் தவெகவுக்கு எதிரான வழக்குகள்

கரூர் துயரம் தொடர்பான வழக்குகள் சென்னை HC தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வருகின்றன. N.ஆனந்த் முன்ஜாமீன் கோரிய மனு, கலெக்டர், எஸ்பிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியது, பிரச்சாரத்தின் போது, அடிப்படை வசதிகள் வழங்குவதை கட்டாயமாக்க கோரிய வழக்குகளும் விசாரணைக்கு வருகின்றன. இதனால் தவெக வட்டாரம் பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது.


