News March 16, 2024
அடுத்த ஆண்டு சென்னையில் செம்மொழி மாநாடு

சென்னையில் 2025 ஜூன் மாதம் 2ஆம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “இயல், இசை, நாடகம் என முத்தமிழுடன் கணினித் தமிழும் இணைந்து நற்றமிழாக திகழ்கிறது. தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி பெற்றுத் தந்து நூற்றாண்டு கனவை நனவாக்கியவர் கலைஞர். அவரது வழியில் சென்னையில் 5 நாள்கள் சீரோடும் சிறப்போடும் நடத்தப்படும்” எனக் கூறினார்.
Similar News
News December 4, 2025
Sports 360°: குதிரையேற்றத்தில் இந்தியாவுக்கு தங்கம்

*மகளிர் ஜூனியர் WC ஹாக்கியில், இந்தியா 1-3 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வி *ஆசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஆஷிஸ் லிமாயே தங்கம் வென்றார் *அதேபோல, ஈவென்டிங் அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி கிடைத்தது *ஜெருசலேம் மாஸ்டர்ஸ் செஸ்-ல் விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தி அர்ஜுன் எரிகைசி சாம்பியன் பட்டம் வென்றார். *ஐசிசி ODI பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலி 4-வது இடத்திற்கு முன்னேற்றம்.
News December 4, 2025
இன்று பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர்கள் அறிவிப்பு

தமிழகத்திற்கு ரெட், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். வட & டெல்டா மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மழையை பொறுத்து அங்கும் விடுமுறை அளிக்கப்படலாம்.
News December 4, 2025
அதிபர் புடின் இன்று இந்தியா வருகை

அரசு முறைப் பயணமாக அதிபர் புடின் இன்று இந்தியா வருகிறார். புடினின் இந்த பயணத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான <<18461190>>வர்த்தகம், பொருளாதாரம்<<>> குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதையடுத்து, டிச.5-ல் நடக்கும் 23-வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் PM மோடி, புடின் பங்கேற்கின்றனர். முன்னதாக, PM மோடி புடினுக்கு சிறப்பு விருந்தளிக்கவுள்ளார். புடின் வருகையையொட்டி டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


