News March 16, 2024

அடுத்த ஆண்டு சென்னையில் செம்மொழி மாநாடு

image

சென்னையில் 2025 ஜூன் மாதம் 2ஆம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “இயல், இசை, நாடகம் என முத்தமிழுடன் கணினித் தமிழும் இணைந்து நற்றமிழாக திகழ்கிறது. தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி பெற்றுத் தந்து நூற்றாண்டு கனவை நனவாக்கியவர் கலைஞர். அவரது வழியில் சென்னையில் 5 நாள்கள் சீரோடும் சிறப்போடும் நடத்தப்படும்” எனக் கூறினார்.

Similar News

News December 5, 2025

அரசின் தனி அதிகார நோக்கமே காரணம்: ராகுல் காந்தி

image

நாடு முழுவதும் <<18476104>>இண்டிகோ<<>> விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் தனி அதிகார நோக்கமே காரணம் என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ஒவ்வொரு துறையிலும் மேட்ச் ஃபிக்ஸிங் செய்யாமல், நியாயமாக போட்டிகள் நடைபெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். விமான தாமதங்கள் போன்ற பிரச்னைகளுக்கான விலையை கொடுப்பது சாமானிய மக்களே என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News December 5, 2025

அலர்ட்.. 18 மாவட்டங்களில் மழை பொளந்து கட்டும்

image

நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 1 மணி நேரத்திற்கு மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், செங்கை, சென்னை, காஞ்சி, குமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. உஷாரா இருங்க நண்பர்களே!

News December 5, 2025

இதனால்தான் IPL-ல் ஓய்வு பெற்றேன்.. ரஸல்!

image

IPL தொடரில் இருந்து விடைபெற்றதற்கான காரணத்தை <<18429842>>ஆண்ட்ரே ரஸல்<<>> தெரிவித்துள்ளார். வெறும் Impact பிளேயராக தொடர தனக்கு விருப்பமில்லை என கூறிய அவர், விளையாடும் போது பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் தாக்கத்தை உண்டாக்க விரும்பியதாக கூறியுள்ளார். மேலும், உலகின் மிகப்பெரிய தொடரான IPL-ல் விளையாட கடுமையான ஜிம் பயிற்சி தேவைப்படுவதாகவும், அதனை சமாளிப்பது மிகவும் சவாலான விஷயம் எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

error: Content is protected !!