News March 16, 2024
அடுத்த ஆண்டு சென்னையில் செம்மொழி மாநாடு

சென்னையில் 2025 ஜூன் மாதம் 2ஆம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “இயல், இசை, நாடகம் என முத்தமிழுடன் கணினித் தமிழும் இணைந்து நற்றமிழாக திகழ்கிறது. தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி பெற்றுத் தந்து நூற்றாண்டு கனவை நனவாக்கியவர் கலைஞர். அவரது வழியில் சென்னையில் 5 நாள்கள் சீரோடும் சிறப்போடும் நடத்தப்படும்” எனக் கூறினார்.
Similar News
News December 10, 2025
BREAKING: முடிவை அறிவித்தார் OPS

தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவோர் பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என எண்ணுவதாக OPS தெரிவித்துள்ளார். போடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒன்றிணைவது குறித்து பொதுக்குழு நடத்துவோர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறினார். EPS தலைமையில் சென்னையில் நடைபெற்று வரும் பொதுக்குழு கூட்டத்தில் <<18520304>>நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களில்<<>> ஒன்றிணைப்பு தொடர்பான அறிவிப்புகள் ஏதும் இல்லை.
News December 10, 2025
அதிமுக கூட்டத்தில் நிறைவேறிய தீர்மானங்கள்

அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ➤திருப்பரங்குன்ற விவகாரத்தில் நீதித் துறைக்கே சவால் விடும் திமுக அரசின் ஆதிக்க மனப்பான்மைக்கு கண்டனம் ➤விவசாயிகள் விளைவித்த நெல்லை உரிய காலத்தில் கொள்முதல் செய்ய வேண்டும் ➤கோவை, மதுரை மெட்ரோவுக்கு அனுமதி வேண்டும் ➤SIR பணிகளுக்கு வரவேற்பு ➤TN-ல் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலுக்கு கண்டனம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
News December 10, 2025
கூட்டணிக்கு EPS-தான் தலைவர்

NDA கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக EPS-ஐ அங்கீகரித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் முழுவதும் EPS-க்கு வழங்கப்படுகிறது எனவும், கூட்டணிக்கு மேலும் சில புதிய கட்சிகள் வரவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், திமுகவுக்கு எதிரான ஒத்த கருத்துடையவர்களுடன் கூட்டணி அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


