News July 30, 2024
இரு சமுதாய மாணவர்களிடையே மோதல்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று (ஜூலை 30) வழக்கம்போல் காலையில் பள்ளிக்கு வந்த 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இரு தரப்பாக மோதிக்கொண்டனர். இதில் இரண்டு மாணவர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News September 12, 2025
நெல்லை: பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் சஸ்பெண்ட்

தருவை அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த ஆங்கில பட்டதாரி ஆசிரியர் குரு விநாயகம் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்வதாக மாணவிகள் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.இந்த மனுவின் மீது விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். விசாரணையில் ஆசிரியர் மீது சுமத்திய குற்றச்சாட்டு உண்மை என தெரிய வந்ததால் இன்று முதன்மை கல்வி அதிகாரியால் பணி நீக்கம் செய்யபட்டார்.
News September 12, 2025
நெல்லை: வாய்க்காலில் விழுந்தவர் உயிரிழப்பு

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே சிங்கி குளத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கருணாநிதி நேற்று முன்தினம் இரவில் மேலகரை பாலத்தின் மீது அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் மது போதையில் தவறி அருகில் உள்ள வாய்க்காலில் விழுந்துள்ளார். இதில் தண்ணீர் மூழ்கிய அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 12, 2025
நெல்லையில் ஒத்த கையில் அரசு பஸ்ஸை ஓட்டிய டிரைவர்

திருநெல்வேலியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர், அலைபேசியில் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கியிருக்கிறார். இதை ஒரு பயணி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பயணிகள் இந்த ஓட்டுநர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.