News May 16, 2024

CAAவின் கீழ் 300 பேருக்கு குடியுரிமை

image

குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்த 300 பேருக்கு முதல் முறையாக குடியுரிமை சான்றிதழ்களை மத்திய அரசு வழங்கியது. மத ரீதியான துன்புறுத்தல் காரணமாக பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் வரும் இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்க CAA வழி வகுக்கிறது. நேற்று குடியுரிமை பெற்ற 300 பேரில் பெரும்பாலானோர் பாகிஸ்தான் இந்துக்கள்

Similar News

News August 15, 2025

டோல்கேட்களில் ஆண்டுக்கு ₹3,000 பாஸ் அமலுக்கு வந்தது

image

நாடு முழுவதும் ஆண்டுக்கு ₹3,000 செலுத்தி பயணம் செய்யும் <>FAStag திட்டம்<<>> இன்று அமலுக்கு வந்தது. *வாகன்(VAHAN) தரவுகளின் மூலம் சரிபார்க்கப்பட்ட வணிக நோக்கமில்லா கார், ஜீப், வேன்களுக்கு மட்டுமே இவை செல்லுபடியாகும். *பாஸ் தொடங்கிய நாளிலிருந்து ஒரு ஆண்டு (அ) 200 டோல் பயணங்கள் செல்லலாம். *TN-ல் 74 டோல்கேட்களில் நடைமுறைக்கு வந்துள்ளது. *இந்த பாஸை பெறுவோர் கட்டாயம் முன் கண்ணாடியில் ஒட்ட வேண்டும். SHARE IT.

News August 15, 2025

J&K மாநில அந்தஸ்து: மோடி கூறும் மந்திரம்

image

ரத்து செய்யப்பட்ட ஜம்மு & காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மீண்டும் கோரிய வழக்கில், பஹல்காம் தாக்குதல் பின்னணியில் அதற்கான சூழலை மத்திய அரசே மதிப்பிடுமாறு நேற்று SC கூறியது. இந்நிலையில், சுதந்திர தின விழாவில் பேசிய மோடி, ‘ஒரே நாடு ஒரே அரசியலமைப்பு’ என்ற மந்திரத்தை ஏற்றபோது பிரிவு 370 என்ற சுவர் இடிக்கப்பட்டது எனக் கூறினார். இது SC அறிவுறுத்தலை மறுப்பது போன்று உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

News August 15, 2025

மதச்சார்பின்மை நீடிக்க சுதந்திர தின வாழ்த்துகள்: விஜய்

image

மதச்சார்பின்மை, சகோதரத்துவம், நல்லிணக்கம் நீடிக்க, அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். நம் தேசத்தின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தன்னலமற்ற தலைவர்கள், தியாகிகள் மற்றும் வீரர்களின் தியாகத்தைப் போற்றி வணங்குவோம் எனவும் தனது X தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக <<17409232>>CM ஸ்டாலின்<<>>, EPS உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!