News April 2, 2025
CISF கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் ஆட்சேர்ப்பு

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) 1161 கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல்காரர், காலணி தைப்பவர், முடி திருத்துபவர், சலவை செய்பவர், ஓவியர், எலக்ட்ரீஷியன், தோட்டக்காரர், வெல்டர், தச்சர் பதவிகள் அடங்கும். அதிகபட்சமாக 493 பதவிகள் சமையல்காரருக்கானவை. பெண் விண்ணப்பதாரர்களும் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். நாளை (ஏப்ரல் 3) கடைசி தேதி. <
Similar News
News December 23, 2025
ராணிப்பேட்டை: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News December 23, 2025
ராணிப்பேட்டையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ராணிப்பேட்டை காரை கூட்ரோட்டில் உள்ள அதிமுக மேற்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில், ராணிப்பேட்டை நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று (டிச.22) நடைபெற்றது. செயலாளர் கே.பி.சந்தோஷம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
News December 23, 2025
ராணிப்பேட்டை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு !

ராணிப்பேட்டை மக்களே! உங்கள் மாவட்டத்திற்கான எரிவாயு உருளை நுகர்வோர்கள், விநியோகிக்கும் முகவர்கள் குறை தீர்க்கும் கூட்டம் வரும் டிசம்பர் 30ம் தேதி, மாவட்ட ஆட்சியார் அலுவகத்தில் மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது புகார்கள் மற்றும் சேவை குறைபாடுகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.


