News March 28, 2024
செவ்வாய் தோஷம் போக்கும் சூட்சுமபுரீஸ்வரர்

செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமணத் தடையை போக்கும் மிக சிறப்பு வாய்ந்த தலமாக திருச்சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர் கோயில் போற்றப்படுகிறது. இந்தத் தலத்துக்கு வந்து மங்களத் திருக்குளத்தில் நீராடி, அம்பாள் பூஜித்த சூட்சுமநாதருக்கு சிவப்பு நிற ஆடை அணிவித்து, சிவப்பு மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, துவரை சாதம் படைத்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்குவதோடு, சிறந்த வாழ்க்கைத்துணை அமையும் என்பது ஐதீகம்.
Similar News
News November 25, 2025
தங்க நகை திருட்டு.. இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவு

திருடு போன நகையை போலீசார் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், பாதிக்கப்பட்ட நபருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதாவது, நகை திருட்டு வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை என போலீசார் வழக்கை முடித்து வைத்தால், புகார்தாரருக்கு 12 வாரங்களுக்குள் அந்த நகையின் மதிப்பில் 30% தொகையை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
News November 25, 2025
வேலை கிடைக்கலையா? ₹15 லட்சம் தரும் அரசு திட்டம்!

இளைஞர்களே படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறீர்களா? 25% மானியத்தில் TN அரசு கடன் வழங்குகிறது. UYEGP திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில் தொடங்க ₹15 லட்சம் கடன் கிடைக்கும். இதனை பெற, குறைந்தது 8-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 45 வயதுக்குட்பட்டவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ₹8 லட்சத்திற்கு மிகாமலும் இருக்கவேண்டும். <
News November 25, 2025
உங்களுக்குள் இருக்கும் ராமரை தட்டி எழுப்புங்கள்: PM மோடி

2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றவேண்டுமென்றால் நமக்குள் இருக்கும் ராமரை தட்டி எழுப்ப வேண்டும் என PM மோடி அறிவுறுத்தியுள்ளார். அயோத்தியில் <<18383307>>கொடி ஏற்றி<<>>ய பின் பேசிய அவர், அதீத பக்தி உணர்வு மூலமாகவே ராமர் நம்மை தொடர்புகொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும், நாம் ராமரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவரை புரிந்து கொண்டு, அவரை உள்வாங்கி அதன்படி நடக்க வேண்டும் என்றும் PM வலியுறுத்தியுள்ளார்.


