News March 28, 2024
செவ்வாய் தோஷம் போக்கும் சூட்சுமபுரீஸ்வரர்

செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமணத் தடையை போக்கும் மிக சிறப்பு வாய்ந்த தலமாக திருச்சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர் கோயில் போற்றப்படுகிறது. இந்தத் தலத்துக்கு வந்து மங்களத் திருக்குளத்தில் நீராடி, அம்பாள் பூஜித்த சூட்சுமநாதருக்கு சிவப்பு நிற ஆடை அணிவித்து, சிவப்பு மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, துவரை சாதம் படைத்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்குவதோடு, சிறந்த வாழ்க்கைத்துணை அமையும் என்பது ஐதீகம்.
Similar News
News November 11, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்

TN அரசுத்துறைகளில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, போட்டித் தேர்வுகளில் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசுத்துறைகளில் பணியாற்றிய ஆண்டுகளின் அடிப்படையில ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்கள் வழங்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் நடைபெறும் சி, டி பிரிவு பணியிடங்களுக்கான அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 11, 2025
குண்டு வெடிப்புக்கு மோடி, அமித்ஷா பொறுப்பு: திருமா

நாட்டின் தலைநகரிலேயே, உயர் பாதுகாப்பு வளையத்துக்குட்பட்ட பகுதியிலேயே காரில் வெடிமருந்தை நிரப்பிக்கொண்டு எப்படி ஊடுருவமுடிந்தது என திருமா கேள்வி எழுப்பியுள்ளார். உள்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‘மோடி-அமித்ஷா-அம்பானி’ கூட்டணி தானே இதற்கு பொறுப்பேற்கவேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார். மேலும், குற்றவாளிகள் அனைவரையும் கைதுசெய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
News November 11, 2025
ஒரே அடியாக ₹5,000 உயர்ந்தது

வெள்ளி விலை இன்று(நவ.11) கிலோவுக்கு ₹1,000 அதிகரித்துள்ளது. நேற்று காலையில் ₹2,000, மாலையில் ₹2,000 என உயர்ந்திருந்த நிலையில், 2 நாள்களில் மட்டும் ஒரே அடியாக ₹5,000 உயர்ந்துள்ளது. கடந்த மாதம் வரலாறு காணாத புதிய உச்சமாக கிராம் ₹207-க்கும், பார் வெள்ளி கிலோ ₹2,07,000-க்கும் விற்பனையானது. பின்னர், சரிவை சந்தித்துவிட்டு மீண்டும் ஏறுமுகத்தை கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.


