News April 27, 2024
மாலத்தீவில் சீன உளவுக் கப்பல்

சீன உளவுக் கப்பல் 2 மாதங்களுக்கு பிறகு மாலத்தீவுக்கு மீண்டும் வந்துள்ளது. மாலத்தீவு அதிபராக மொய்சூ பதவியேற்ற பிறகு, அந்நாடு இந்தியாவின் போட்டி நாடான சீனாவுடன் நட்பு பாராட்டி வருகிறது. மாலத்தீவுக்கு பிப்ரவரி மாதம் சீனாவின் சியாங் யாங் ஹாங் 3 என்ற கப்பல் வந்து ஒரு வாரம் முகாமிட்டிருந்தது. பிறகு திரும்பிச் சென்ற அக்கப்பல், 25ஆம் தேதி மீண்டும் வந்து துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News March 3, 2026
மகளிர் உரிமைத் தொகை.. ஸ்டாலின் மகிழ்ச்சி செய்தி

மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட பல முத்திரைத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தும் வேறு மாநில அரசு நாட்டிலேயே நிச்சயமாக இருக்க முடியாது என்று CM ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதுபோன்ற திட்டங்களை சிறிய குளறுபடி இல்லாமல் சரியாக செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார். இதனிடையே, உயர்த்தப்பட்ட தொகை ₹2,000, திமுக ஆட்சி அமைந்தால் ஜூனில் இருந்து வரவு வைக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
News March 3, 2026
நாளை தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறாரா விஜய்?

தஞ்சையில் நாளை தவெக நிர்வாகிகளை விஜய் சந்திக்கவிருக்கும் நிலையில், தற்போது தேர்தல் அறிக்கைக் குழுவுடன் புஸ்ஸி ஆனந்த் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நாளையை நிர்வாகிகள் சந்திப்பின்போது தவெகவின் முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை விஜய் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, திமுகவும், அதிமுகவும் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது
News March 3, 2026
கனடாவிடம் யுரேனியம் வாங்கும் இந்தியா!

அரிய வகை கனிமங்கள் துறையில் இந்தியா-கனடா இடையே வரலாற்று சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. PM மோடி – கனடா PM மார்க் கார்னி முன்னிலையில் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவின் அணுசக்தி தேவைக்காக, ₹24,000 கோடி மதிப்பிலான யுரேனியத்தை 2035 ஆண்டு வரை கனடா வழங்கும். இதன் மூலம், இந்தியாவில் உள்ள அணு உலைகளுக்கு யுரேனியம் தட்டுப்பாடு ஏற்படாது எனக் கூறப்படுகிறது.


