News October 24, 2025
இந்திய எல்லையில் ஏவுகணை தளம் அமைக்கும் சீனா

திபெத்தில் உள்ள பாங்காங் ஆற்றுப்படுகையில் சீனா சத்தமே இல்லாமல், வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி வருகிறது. வெடிமருந்து குடோன், கட்டளை, கட்டுப்பாடு மையங்கள், ஏவுகணை ஏவுதள கட்டுமானங்களை நிறுவி வருவது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த பகுதி இந்திய எல்லையில் இருந்து 110 கிமீ தொலைவில் உள்ளது. 2020-ல் எல்லை மோதல்கள் நடந்த இடங்களில் இப்பகுதியும் ஒன்றாகும்.
Similar News
News October 25, 2025
ராசி பலன்கள் (25.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News October 25, 2025
பேப்பரில் பொட்டலம் கட்டிய உணவுகளை சாப்பிடலாமா?

செய்தித்தாள்களில் பொட்டலம் கட்டப்படும் உணவுப் பொருள்களை உட்கொள்வது, உடல் நலத்திற்கு நல்லதல்ல என FSSAI எச்சரித்துள்ளது. நாளிதழ்களில் அச்சிடும் மையில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களும், பேசிலஸ் நுண்ணுயிரியல் தாக்குதலும் குடற்புற்றுநோயை ஏற்படுத்துகிறதாம். இதன் காரணமாகவே உணவுப் பொருள்களை பேக்கிங் செய்வதற்கும், பாதுகாத்து வைப்பதற்கும் தாள்களை பயன்படுத்த வேண்டாமென FSSAI அறிவுறுத்தியுள்ளது.
News October 24, 2025
‘பைசன்’ பார்த்துவிட்டு பாராட்டிய வைகோ

‘பைசன்’ படத்தை பார்த்துவிட்டு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வைகோ போனில் பேசி வாழ்த்து தெரிவித்ததாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். நீண்ட நாள்களுக்கு பிறகு நான் பார்த்த சினிமா, இதை எடுத்த இயக்குநர் யார் என தேட வைத்தது மாரி, நீங்கள் தூரத்தில் இருக்கிறீர்கள், நான் இங்கிருந்தே கட்டித் தழுவுகிறேன் என வைகோ தெரிவித்ததாகவும் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.


