News March 17, 2024
பாகிஸ்தானுக்கு உளவுக்கப்பல் வழங்கிய சீனா

பாகிஸ்தானுக்கு நவீன உளவுக்கப்பலை சீனா வழங்கியிருப்பது, இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா நடத்தும் பேலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை தனது உளவுக்கப்பல்கள் மூலம் சீனா கண்காணித்து வருகிறது. தற்போது பாகிஸ்தானுக்கும் அதேபோன்ற உளவுக்கப்பலை சீனா அளித்துள்ளது. இது 87 மீட்டர் நீளமுடையது. இந்தியாவிடம் இதைவிட பெரிதாக 175 மீட்டர் நீள நவீன உளவுக்கப்பல் உள்ளது.
Similar News
News April 26, 2025
2ஆவது நாளாக தங்கம் விலையில் மாற்றமில்லை

கடந்த 22-ம் தேதி 1 கிராம் தங்கம் ரூ.9,290ஆகவும், சவரன் தங்கம் ரூ.74,320ஆகவும் அதிகரித்து உச்சம் தொட்டது. எனினும் 23, 24-ம் தேதிகளில் தங்கம் விலை குறைந்தது. 24-ம் தேதி 1 கிராம் ரூ.9,005ஆகவும், 1 சவரன் ரூ.72,040ஆகவும் விற்பனையானது. ஆனால் நேற்று அந்த விலை மாற்றப்படவில்லை. அதேபோல் இன்றும் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. சர்வதேச சந்தையில் தங்க விலை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
News April 26, 2025
உணவை வேகமாக சாப்பிடுபவரா நீங்கள்..?

நம்மில் பலரும் சாப்பிடும் போது, உணவை வேகமாக சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களே. ஆனால், இதனால் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது தெரியுமா? உணவை மெதுவாக மென்று உண்ணுபவர்கள் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நம் வயிறு நிரம்பியிருப்பதை உணர நமது மூளை நேரமாகும். இதனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவோம். வயிறு நிரம்பியிருப்பதை உணர, மூளைக்கு சுமார் 20 நிமிடங்கள் ஆகுமாம்.
News April 26, 2025
சர்வதேச விசாரணை கோரும் பாகிஸ்தான்

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பேட்டி ஒன்றில் எந்த ஆதாரமும் இன்றி இந்தியா தங்களை குற்றம்சாட்டி வருவதாக பாக். பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார். போர் வெடிப்பதை விரும்பவில்லை என தெரிவித்த அவர் போரால் பேரழிவு மட்டுமே ஏற்படும் எனவும் கூறியுள்ளார்.