News April 27, 2025
சீனாவே காரணம்.. மதுரை ஆதீனம்

பஹல்காம் தாக்குதல் விவகாரத்தால் பாக்.-க்கு சிந்து நதி நீரை தரக்கூடாது எனக் கூறிய மதுரை ஆதீனம், பாக்.-ஐ தனிமைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு சீனா தான் காரணம் என குற்றஞ்சாட்டிய அவர், வக்ஃபுக்காக போராடுபவர்கள் ஏன் இந்த விவகாரம் குறித்து பேசுவதில்லை என கேள்வி எழுப்பினார். பாகிஸ்தான் ஒரு மதக்கலவர பூமி என குறிப்பிட்ட ஆதீனம், சீனாவை உலக நாடுகள் ஒதுக்க வேண்டும் என்றார்.
Similar News
News December 26, 2025
குளிர்கால சோர்வை விரட்டும் 7 யோகாசனங்கள்!

குளிர்காலம் வந்துவிட்டாலே பலருக்கும் ஒருவித பருவகால மனச்சோர்வு வந்துவிடும். இந்நிலையில் குளிர்காலத்திலும் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள இந்த 7 யோகாசனங்கள் உதவும். 1.உஸ்ட்ராசனம் 2.புஜங்காசனம் 3.வஜ்ராசனம் 4.சர்வாங்காசனம் 5. மத்ஸ்யாசனம் 6.மர்ஜாராசனம் 7.இயக்க-மூச்சுப் பயிற்சிகள். இவை மனச்சோர்வை போக்குவது மட்டுமின்றி, உடல் ஆரோக்கியம் மற்றும் சமநிலை மீட்டெடுக்கவும் உதவுகின்றன.
News December 26, 2025
விஜய்யுடன் பணியாற்றுவது கொடுப்பினை: KAS

நான் சேர்ந்த இடம் (தவெக), கோட்டைக்கு செல்கிற இடம் என செங்கோட்டையன் கூறியுள்ளார். விஜய் தன்னிடம் மனம் திறந்து பேசியதாக கூறிய அவர், இப்படிப்பட்ட தலைவரோடு பணியாற்ற, தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் எனவும் புகழ்ந்தார். மேலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவோடு பணியாற்றிய தனக்கு, தற்போது அடுத்த தலைமுறை தலைவரான விஜய்யுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News December 26, 2025
வங்கி கணக்கில் ₹2,000.. அரசு புதிய அறிவிப்பு

நலிவடைந்த விவசாயிகளுக்கு PM KISAN திட்டத்தில் மத்திய அரசு ஆண்டுக்கு 3 தவணைகளாக தலா ₹2,000 வழங்கி வருகிறது. அடுத்த தவணை 2026 பிப்ரவரியில் டெபாசிட் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விவசாய அடையாள எண்ணை பதிவு செய்யுமாறு தமிழக விவசாயிகளுக்கு மாவட்ட வாரியாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆதார் அட்டை, நில உரிமை ஆவணங்களுடன் தோட்டக்கலை துறையில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


