News April 9, 2025
USA-வை எதிர்க்க இந்தியாவை அழைக்கும் சீனா

அதிகவரி விதித்து உலக நாடுகளை டிரம்ப் அச்சுறுத்தி வருகிறார். இந்த அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்தியாவும், சீனாவும் பொருளாதார, வர்த்தக ரீதியில் இணைந்து செயல்பட வேண்டும் என டெல்லியில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த ஒருதலைபட்சமான நடவடிக்கையை கூட்டாக எதிர்க்க வேண்டும் எனவும், பன்முகத்தன்மையை நிலைநாட்ட வேண்டும் எனவும் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
Similar News
News December 10, 2025
TN அரசுடன் ₹4,000 கோடிக்கு ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம்

தமிழக அரசு மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ₹4,000 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், தமிழக அரசுடன் இணைந்து திரைப்படங்கள், வெப் சீரிஸ் உள்ளிட்டவற்றை ஜியோ ஹாட்ஸ்டார் தயாரிக்கும். இது ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும், இளம் படைப்பாளிகளுக்கு தேவையான ஊக்கத்தையும் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 9, 2025
வங்கி கடன் தள்ளுபடி… அரசு வெளியிட்ட அறிவிப்பு

கடந்த 5 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் ₹6.15 லட்சம் கோடி வாராக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது என பார்லிமென்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலம் வரை வசூலிக்க முடியாமல் போகும் கடன்கள் வங்கி பதிவுகளில் இருந்து நீக்கப்படும். இதற்கு, லோன் காசை கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்பது அர்த்தமல்ல. வங்கிகள் தொடர்ந்து இக்கடன்களை திரும்பப் பெற முயற்சிகள் எடுக்கும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
News December 9, 2025
பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள்

இந்திய தேசிய மகளிர் ஆணையம், பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரங்கள் குறித்த தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, இந்தியாவின் 31 நகரங்களில் (அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியது) 12,770 பெண்களிடம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது. அவை என்னென்ன நகரங்கள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


