News April 14, 2025

விடுமுறையில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் பலி… சோகம்!

image

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி விடுமுறை என்பதால் சிறுவர்கள் வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்றபோது, அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல, ஒகேனக்கல் ஆற்றில் சுற்றுலா வந்த 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அடுத்தடுத்து நடைபெற்ற இச்சம்பவங்கள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களே, குழந்தைகளை கவனிங்க.

Similar News

News November 24, 2025

சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹1,000 குறைந்தது

image

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி இன்று ஒருகிராம் வெள்ளி விலை ₹1 குறைந்து ₹171-க்கும், கிலோ வெள்ளி ₹1,000 குறைந்து ₹1,71,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இறங்கு முகத்தில் இருப்பதால், நம்மூரிலும் வரும் நாள்களில் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News November 24, 2025

SC-ன் 53-வது தலைமை நீதிபதி.. யார் இந்த சூர்யகாந்த்?

image

ஹரியானாவின் ஹிசாரில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த இவர், பஞ்சாப், ஹரியானா ஐகோர்ட்டுகளில் நீதிபதியாகவும், 2018-ல் இமாச்சல் ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாகவும் பணிபுரிந்துள்ளார். 2019 மே மாதம் SC நீதிபதியானார். J&K 370 சட்டப்பிரிவு நீக்கம், பிஹார் SIR, பெகாசஸ் உள்ளிட்ட முக்கிய வழக்குகளின் தீர்ப்புகளை வழங்கிய அமர்வுகளில் சூர்யகாந்த் அங்கம் வகித்திருந்தார்.

News November 24, 2025

இந்து கல்லூரியில் முஸ்லிம் மாணவர்கள்.. பாஜக எதிர்ப்பு

image

ஜம்மு & காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் 42 முஸ்லிம், 8 இந்து மாணவர்கள் சேர்க்கப்பட்டிருப்பது, அரசியல் ரீதியான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, VHP, பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் துணைநிலை ஆளுநரிடம் மனு அளித்துள்ளன. ஆனால், நீட் தகுதி தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!