News April 14, 2025

விடுமுறையில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் பலி… சோகம்!

image

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி விடுமுறை என்பதால் சிறுவர்கள் வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்றபோது, அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல, ஒகேனக்கல் ஆற்றில் சுற்றுலா வந்த 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அடுத்தடுத்து நடைபெற்ற இச்சம்பவங்கள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களே, குழந்தைகளை கவனிங்க.

Similar News

News November 23, 2025

6 ஆண்டுகளுக்கு பின் சதம்… முத்துசாமியின் சாதனை

image

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில், இன்று SA பேட்ஸ்மேன் முத்துசாமி, தனது முதல் சதத்தை(109) அடித்தார். இதன்மூலம், 6 ஆண்டுகளுக்கு பின், இந்தியாவில் 7 (அ) அதற்கு அடுத்த நிலையில் இறங்கி சதம் அடித்த முதல் SA வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடைசியாக 2019-ல் டி காக் இந்தியாவில் சதம் அடித்தார். மேலும், இந்தியா, பாக்., வ.தேசம் நாடுகளில் 50+ ரன்கள் குவித்த 4-வது SA வீரராகவும் முத்துசாமி சாதித்துள்ளார்.

News November 23, 2025

SIR ஒரு திட்டமிட்ட சதி: ராகுல் காந்தி

image

SIR என்பது ஒரு சீர்திருத்தம் அல்ல, அது ஒரு திணிக்கப்பட்ட ஒடுக்குமுறை என்று ராகுல் காந்தி சாடியுள்ளார். 16 BLO-க்கள் உயிரிழந்ததை X-ல் சுட்டிக்காட்டி, SIR என்ற திட்டமிட்ட சதியால் வாக்காளர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், தேவையற்ற அழுத்தத்தால் BLO-க்கள் இறப்பதாகவும் தெரிவித்துள்ளார். SIR-ன் நோக்கம் சரியாக இருந்திருந்தால் EC போதுமான அவகாசம் எடுத்து அதை செயல்படுத்தியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

News November 23, 2025

அஜித்தை பாராட்டிய செல்வப்பெருந்தகை

image

கார் ரேஸிங்கில் விருதுகளை குவித்துவரும் அஜித்துக்கு, <<18364909>>GENTLEMAN DRIVER OF THE YEAR 2025<<>> விருது மேலும் ஒரு மகுடமாக அமைந்திருக்கிறது. அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்த செல்வப்பெருந்தகை, தன்னம்பிக்கை, கடின உழைப்புதான் வெற்றியின் அடித்தளம் என்பதை அவர் மீண்டும் நிரூபித்திருப்பதாக பாராட்டியுள்ளார். அஜித்தின் எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்க வாழ்த்துகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!