News May 8, 2025
குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ என்று பெயரிடப்படுகிறது!

‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்தியர்களின் உயிரை பறித்த மனித அரக்கர்களான பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் கொன்று குவித்தது. இதை இந்தியர்கள் கொண்டாடுகிறார்கள். இச்சம்பவம் என்றென்றும் நினைவில் இருக்கும் வகையில், மே 7-ல் பிறந்த தங்கள் குழந்தைகளுக்கு சிலர் இப்பெயரை சூட்டத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், பிஹாரில் குந்தன் குமார் என்பவர் தனது மகளுக்கு ‘சிந்தூர்’ என்று பெயரிட்டு, தேசபக்தியை வெளிப்படுத்தினார்.
Similar News
News November 24, 2025
மேட்டூர் அருகே ரயில் இன்ஜின் மோதி விபத்து!

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டாவது பிரிவில் சரக்கு பெட்டியில் நிலக்கரி லோடு ஏற்றி சென்று அவற்றை இறக்கிவிட்டு மீண்டும் ரயிலின் பெட்டியை மாற்றி பொருத்தும் பணி நடைபெற்றது. அப்பொழுது எதிர்பாராத விதமாக ரயில் இன்ஜின், புறப்பட தயாராக இருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் யாரும் இல்லாதகாரணத்தால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
News November 24, 2025
542 பணியிடங்கள்.. இன்றே கடைசி: APPLY

மத்திய அரசின் எல்லை சாலைகள் நிறுவனத்திலுள்ள (BRO) Vehicle Mechanic உள்ளிட்ட 542 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: 10th, ITI. வயது வரம்பு: 18 – 25. சம்பளம்: ₹18,000 – ₹63,200. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.24. இது குறித்து மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News November 24, 2025
ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள்.. வந்தது அலர்ட்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை மறுநாள் புயலாக மாற வாய்ப்புள்ளது. இந்நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் வருவதால் தமிழகத்தில் கனமழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


