News March 19, 2025

2 மனைவிகள் இருந்தும் சிறுமி வன்கொடுமை.. அதிரடி தீர்ப்பு

image

காஞ்சிபுரம் அருகே 2 மனைவிகள் இருந்தும் 14 வயது சிறுமியை வன்கொடுமை செய்த கொடூரனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கொடூரன் ஜெயபால், கடந்த 2019இல் தனது மனைவிகள் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். ஜெயபாலுக்கு ₹15,000 அபராதமும் விதித்துள்ள கோர்ட், சிறுமிக்கு ₹10 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு ஆணையிட்டுள்ளது.

Similar News

News March 22, 2025

வேலை பார்க்கும் மனைவிக்கு ஜீவனாம்சம் கிடையாது: SC

image

கணவருக்கு இணையாக வேலை பார்த்து ஊதியம் பெறும் மனைவிக்கு ஜீவனாம்சம் அளிக்க உத்தரவிட SC மறுத்துவிட்டது. கணவரிடம் விவாகரத்து பெற்ற மனைவி, ஜீவனாம்சம் கோரி மனு தொடுத்திருந்தார். அதற்கு கணவர் தரப்பில், மனைவியும் தன்னைப் போல ரூ.60,000 சம்பளம் பெறுகிறார் என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதத்தை கேட்ட SC, கணவருக்கு இணையாக மனைவி சம்பளம் வாங்குவதை சுட்டிக்காட்டி, மனுவை தள்ளுபடி செய்தது.

News March 22, 2025

திமுக அரசு திணறி வருகிறது: அன்புமணி

image

கொலை, கொள்ளையை தடுக்க முடியாமல் திமுக அரசு திணறி வருவதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் 6,597 படுகொலைகள் நடைபெற்றுள்ளதாகவும், ஆனால் உண்மைக்கு மாறாக குற்றங்கள் குறைந்துள்ளதாக முதல்வர் கூறுவது முற்றிலும் தவறானது என்றும் அவர் விமர்சித்துள்ளார். சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால், கொலைகள் குறைந்திருக்கும், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

News March 22, 2025

300 செயலிகள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்!

image

பயனர்களின் தகவல்களை திருடியதாக 300 ஆப்களை PlayStoreலிருந்து கூகுள் நீக்கியுள்ளது. தனிப்பட்ட தகவல்களுடன் கிரெடிட் கார்டு உள்ளிட்ட நிதி தொடர்பான தகவல்களை மோசடியாளர்களுக்கு அனுப்பி வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலானவை மருத்துவம், QR ஸ்கேனர், வால்பேப்பர் செயலிகள் என்பது தெரியவந்துள்ளது. இதனால், ‘Android 13 OS’ பயன்படுத்துவோர் உடனடியாக அப்டேட் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!