News April 22, 2025
தவெகவினருக்கு தலைமை உத்தரவு

2026 தேர்தலை நோக்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் விஜய், விரைவில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், விஜய்யின் வாகன பிரச்சாரத்திற்கு முன்னதாக, கொள்கை குறித்து கட்சி நிர்வாகிகள் வாகன பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என தலைமை உத்தரவிட்டுள்ளது. கட்சித் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், தவெக கொள்கையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 15, 2025
இரவோடு இரவாக உடற்கூராய்வு: CM விளக்கம்

கரூர் துயரில் 13 ஆண்கள், 18 பெண்கள், 10 குழந்தைகள் என 41 பேர் உயிரிழந்த விவரத்தை ஸ்டாலின் பேரவையில் தெரிவித்தார். உயிரிழந்தோரின் அனைத்து உடல்களையும் கரூர் அரசு ஹாஸ்பிடலின் பிணவறையில் வைக்க போதிய குளிர்சாதன வசதி இல்லாததால், கலெக்டரின் சிறப்பு அனுமதி பெற்று அன்று இரவே உடற்கூராய்வு செய்யப்பட்டது என்றார். செப்.28, மதியம் 1:10 மணியளவில் 39 உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்டன என்றும் தெரிவித்தார்.
News October 15, 2025
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தவெகவினர் தாக்கினர்: CM

கரூர் துயர சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு, எதிர்க்கட்சி தலைவர் (EPS) வேலுசாமிபுரத்தில் நடத்திய கூட்டத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என ஸ்டாலின் கூறியுள்ளார். பேரவை கூட்டத்தொடரில் கரூர் விவகாரம் பற்றி விளக்கமளித்த அவர், கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றத் தான் ஆம்புலன்ஸ் வந்ததாக தெரிவித்தார். ஆனால், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தவெக நிர்வாகிகள் தாக்கியதாக குற்றஞ்சாட்டினார்.
News October 15, 2025
முதல்வர், ஏடிஜிபி தகவலில் முரண்: இபிஎஸ்

கரூர் சம்பவத்தில் பாதுகாப்பு தொடர்பாக CM மற்றும் ஏடிஜிபி அளித்த தகவல்களில் முரண்பாடு உள்ளதாக EPS விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், 600 போலீசார் பாதுகாப்பில் இருந்ததாக CM கூறுவதாகவும் ஆனால் ஏடிஜிபியோ 500 போலீசார் என குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார். TVK கேட்ட இடத்தை அளித்திருந்தால், கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.