News June 11, 2024

ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதலமைச்சர் திட்டம்’

image

ஜூலை 15 முதல் செப்டம்பர் 15 வரை ஊரக பகுதிகளில் ‘மக்களுடன் முதலமைச்சர் திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 15 துறைகள் சார்ந்த மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட உள்ளது. இம்மனுக்கள் மீது ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 5, 2025

BCCI பொறுப்புக்கு காய் நகர்த்தும் பிரவீன் குமார்

image

அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவில் இடம்பெற, முன்னாள் இந்திய வீரர் பிரவீன் குமார் விண்ணப்பித்துள்ளார். BCCI-ன் தேசிய அணிக்கான தேர்வுக்குழுவில், 2 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வரும் 10-ம் தேதி கடைசி நாள் என்பதால், பிரவீன் குமார் தற்போது விண்ணப்பித்துள்ளார். அதேபோல், மற்றொரு முன்னாள் வீரரான RP சிங்கும் விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News September 5, 2025

செங்கோட்டையன் மனம் திறக்கவில்லை: திருமா

image

செங்கோட்டையன் சொன்னது போல் முழுமையாக, மனம் திறந்து பேசவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி பேச விரும்பவில்லை, ஆனாலும் அவர் இன்னும் வெளிப்படையாகவே பேசியிருக்கலாம் எனவும் கூறியுள்ளார். பெரியார் இயக்கம் என்ற முறையில் விசிக, அதிமுகவை பெரிதும் மதிக்கிறது என்றார்.

News September 5, 2025

ஆசிரியர்களுக்காக குரல் கொடுத்த விஜய்

image

ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார். ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு அவர், தனது X தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அர்ப்பணிப்பு உணர்வோடு ஏற்றமிகு தலைமுறையை உருவாக்கி வரும் ஆசிரியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்கள் வாழ்வில் ஏற்றம் காண வழிவகை செய்யுமாறு அரசுக்கு விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.

error: Content is protected !!