News May 16, 2024
மாவட்ட வாரியாக நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு

தமிழகத்தில் போதைப்பொருள் தலைவிரித்தாடுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின், டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த அவர், போதைப்பொருள் ஒழிப்பில் மாவட்ட வாரியாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
Similar News
News November 6, 2025
பிரபல ராப் பாடகர்கள் PHOTOS

பீட்ஸ், ரிதமிக் வார்த்தைகள், வேகமாக பாடுவது ஆகியவை ராப் இசை மீதான ஈர்ப்புக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. உலகம் முழுவதும் ராப் இசைக்கு பல மொழிகள் இருந்தாலும், ஹே, யோ – என்பது ராப் கலையின் அடையாளமாக இருந்து வருகிறது. தென்னிந்தியாவின் சில ராப் இசை கலைஞர்களின் போட்டோக்களை, மேலே பகிர்ந்துள்ளோம். ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு பிடித்த ராப் பாடல் எது? கமெண்ட் பண்ணுங்க.
News November 6, 2025
ரொட்டி (பிஹார்) கருகிவிடும்: லாலு பிரசாத் யாதவ்

பிஹாரில் 20 ஆண்டு நிதிஷ் ஆட்சியை ரொட்டியுடன் லாலு பிரசாத் யாதவ் ஒப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு ரொட்டியை திருப்பி போடவில்லை என்றால் கருகிவிடும். அதுபோல, 20 ஆண்டுகள் என்பது நீண்ட காலம், எனவே ஆட்சி மாற்றம் என்பது அவசியமாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், புதிய பிஹாரை உருவாக்க இளைஞர்கள் (தேஜஸ்வி) கையில் ஆட்சி அதிகாரம் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News November 6, 2025
₹2,708 கோடியை அள்ளி கொடுத்த ஷிவ் நாடார்

இந்தியாவில் நடப்பாண்டில் அதிக நன்கொடை வழங்கிய தொழிலதிபர்களின் பட்டியலை EdelGive Hurun வெளியிட்டுள்ளது. இதில், ₹2,708 கோடி நன்கொடை வழங்கி ஷிவ் நாடார் முதலிடத்தில் உள்ளார். நாளொன்றுக்கு சராசரியாக ₹7.4 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். கல்வி, கலை, கலாசார துறைகளில் அதிகமாக நன்கொடை வழங்கியுள்ளார். அவருக்கு அடுத்ததாக, முகேஷ் அம்பானி ₹626 கோடி, பஜாஜ் குடும்பம் ₹446 கோடி வழங்கியுள்ளனர்.


