News May 16, 2024

மாவட்ட வாரியாக நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு

image

தமிழகத்தில் போதைப்பொருள் தலைவிரித்தாடுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின், டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த அவர், போதைப்பொருள் ஒழிப்பில் மாவட்ட வாரியாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Similar News

News November 23, 2025

உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் ஏற்பாடு: நயினார்

image

மத்திய அரசு எதைக் கொண்டு வந்தாலும், அதை எதிர்ப்பதிலேயே நான்கரை ஆண்டுகளை திமுக வீணடித்து விட்டதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். கஞ்சா, போதை பொருட்களை ஒழிக்காத ஸ்டாலின், சொத்து வரி, மின் கட்டண உயர்வு பற்றி கண்டுகொள்ளவில்லை எனவும் சாடினார். ஆனால் உதயநிதியை முதல்வராக்கும் ஏற்பாடுகளை ஸ்டாலின் செய்து வருவதாக விமர்சித்தார். மேலும் நெல் ஈரப்பத அதிகரிக்க முழு காரணம் திமுகதான் எனவும் தெரிவித்தார்.

News November 23, 2025

16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

image

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. முக்கியமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, கடலூர், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்யுதா?

News November 23, 2025

10 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்

image

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிச.1-ம் தேதி முதல் டிச.19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 10 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக அணுசக்தி மசோதா 2025 தாக்கல் செய்யப்படுகிறது. இதைத்தவிர உயர்கல்வி கமிஷன் மசோதா, தேசிய நெடுஞ்சாலைகள் திருத்த மசோதா, கார்பரேட் சட்டங்கள் திருத்த மசோதா உள்ளிட்டவையும் பட்டியலிடப்பட்டு உள்ளது.

error: Content is protected !!