News February 24, 2025
வழக்கறிஞர் சட்டத்திருத்த மசோதாவுக்கு முதல்வர் எதிர்ப்பு

வழக்கறிஞர் சட்டத்திருத்த மசோதாவுக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த மசோதா சட்டத்துறை சுயாட்சியின் மீதான தாக்குதல் என்றும், 2014 முதல் நீதித்துறையின் சுதந்திரத்தை குறைக்கும் நடவடிக்கையில் பாஜக அரசு ஈடுபட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டம் ஒரு இருட்டறை, அதில் வழக்கறிஞரின் வாதம் விளக்கு போன்றது என்ற பேரறிஞர் அண்ணாவின் வரிகளை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Similar News
News February 24, 2025
இன்றைய பொன்மொழிகள்

▶வாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்குப் பிடித்தமாதிரி பிடித்த இடத்திலே போய் நின்று கொள்வதில்லை. ▶உண்மைகள் ஒன்றும் அவ்வளவு முக்கியமில்லை. ஒரு நல்ல நம்பிக்கையைச் சிதைக்காமலிருப்பதே மிகவும் முக்கியம் ▶சுயவிமரிசனம் உடையோரை, பிற விமரிசனங்கள் பாதிப்பதில்லை. ▶வாழ்க்கை சொர்க்கமா ஆகறதுக்குப் பணம் மட்டும் காரணமில்லேதான், ஆனா நரகமா வாழ்க்கை ஆகறதுக்குப் பணம் இல்லேங்கற ஒரே காரணம் போதும்.
News February 24, 2025
விமர்சித்தால் கடும் நடவடிக்கை: செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் முன்னணி தலைவர்களை கட்சியினர் விமர்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செல்வப்பெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்சியில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, பொதுவெளியில் கருத்து தெரிவிப்பது காங்கிரஸ் கட்சிக்கு நல்லதல்ல என்றும் தெரிவித்துள்ளார். தன் மீதான விமர்சனங்களை தாங்கிக்கொள்ளவும், எதிர்கொள்ளவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
News February 24, 2025
ஐ.எஸ்.எல். கால்பந்து: மோகன் பகான் அணி வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் ஒடிசா அணியை வீழ்த்தி மோகன் பகான் அணி வெற்றி பெற்றது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால் இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனையடுத்து கூடுதல் நேரத்தில் மோகன் பகான் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் அந்த அணி வென்றது.