News April 29, 2025
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கவாய்-ஐ நியமனம் செய்து குடியரசுத் தலைவர் முர்மு உத்தரவிட்டுள்ளார். தற்போது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா மே 13 அன்றுடன் ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து, புதிதாக நியமிக்கப்பட்ட பி.ஆர். கவாய் மே 14-ம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொள்கிறார். அடுத்த ஆறு மாதங்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக இருக்கப்போகும் அவர், நவ., மாதம் ஓய்வு பெறுவார் என தெரிகிறது.
Similar News
News November 10, 2025
SA உடனான இந்தியாவின் மோசமான ரெக்கார்ட்

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரும் 14-ம் தேதி தொடங்கி உள்ளநிலையில், அந்த அணி உடனான இந்திய அணியின் கடந்த கால ரெக்கார்ட்கள் கவலையை கொடுக்கின்றனர். இதுவரை இரு அணிகளும் 16 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளனர். அதில் 8 முறை தென்னாப்பிரிக்கா அணியே வெற்றி பெற்றுள்ளது. 4 முறை மட்டுமே இந்திய அணி வென்ற நிலையில், 4 தொடர் டிராவில் முடிந்துள்ளது.
News November 10, 2025
நவம்பர் 10: வரலாற்றில் இன்று

*1910 – எழுத்தாளர் சாண்டில்யன் பிறந்தநாள். *1958 – நடிகர் ஆனந்தராஜ் பிறந்தநாள். *1975 – கவிஞர் தாமரை பிறந்தநாள். *1983 – விண்டோஸ் 1.0 அறிமுகப்படுத்தப்பட்டது. *1999 – பாகிஸ்தானில் தேசத் துரோகம் மற்றும் சதி செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் PM நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. *2019 – இந்திய தேர்தலில் சீர்திருத்தம் மேற்கொண்ட முன்னாள் ஐஏஎஸ் டி.என்.சேஷன் காலமானார்.
News November 10, 2025
பாமகவுடன் நூதன டீலிங்கை தொடங்கிய அதிமுக கூட்டணி

அன்புமணி – ராமதாஸ் என்ற இருதரப்பினருடன் பாஜக- அதிமுக கூட்டணி நூதனமான டீலிங் பேசிவருகிறதாம். அன்புமணி தரப்புடன் பாஜகவும், ராமதாஸ் தரப்புடன் ஆத்தூர் இளங்கோ மூலமாக EPS-ம் பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறாராம். அன்புமணி 15 தொகுதிகள் + 1 ராஜ்யசபா கேட்கும் நிலையில், அதைவிட குறைவாக ராமதாஸ் ஒத்துக்கொள்ள மாட்டார் என்கின்றனர். அதேபோல், எந்த அணி ராஜ்யசபா சீட்டை கைப்பற்றும் என்ற போட்டியும் எழுந்துள்ளதாம்.


