News May 16, 2024
ஆச்சரியங்களை அள்ளித்தரும் சென்னிமலை முருகன்

விநாயகருக்கு முதல் பூஜை செய்யப்படும் நிலையில், சென்னிமலை முருகன் கோயிலில் மூலவர் முருகனுக்கு நைவேத்ய பூஜை முடிந்த பின்பே, சந்நிதி விநாயகருக்கு பூஜை செய்யப்படும். 2 திருமுகங்கள், 8 திருக்கரங்களுடன் கந்தன் காட்சி தரும் சிறப்பு இந்த கோயிலுக்கு உண்டு. இந்த கோயிலுக்கு மேல் காகங்கள் பறப்பதில்லை என்பது அதிசயமான ஒன்றாகும். முருகனுக்கு அபிஷேகம் செய்த தயிர் புளிப்பதில்லை என்றும் நம்பப்படுகிறது.
Similar News
News October 15, 2025
பசுமை பட்டாசுகளை விற்க அனுமதி

காற்று மாசுபாட்டால் மூச்சு முட்டும் டெல்லியில், 5 ஆண்டுகள் கழித்து தீபாவளிக்கு வெடி சத்தம் கேட்கவுள்ளது. வரும் தீபாவளிக்கு, டெல்லியில் பசுமை பட்டாசுகளை வெடிக்க SC அனுமதியளித்துள்ளது. அதன்படி, அக்.18-ம் தேதி முதல் அக்.21-ம் தேதி வரை மாலை 6 – இரவு 10 மணி வரை வெடித்துக்கொள்ளலாம். மேலும், அனுமதிக்கப்பட்ட பட்டாசு கடைகளில் மட்டுமே பசுமை பட்டாசுகளை விற்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
News October 15, 2025
பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்க ஸ்டாலின்: அதிமுக

Foxconn நிறுவனம், CM ஸ்டாலினுடன் சந்திப்பு நடத்தியதாகவும், ₹15,000 கோடி முதலீடு செய்யப்போவதாகவும் அரசு அறிவித்தது. ஆனால், இதை Foxconn மறுத்துள்ளது. இதை சுட்டிக்காட்டிய அதிமுக, “பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லுங்க” என்ற ஸ்டாலின் பயன்படுத்திய பொன்மொழியை, அவருக்கே நினைவுபடுத்த விழைகிறோம். ஏனெனில், பொருத்தமற்ற பொய்கள் இப்படி தான் சீக்கிரமே அம்பலப்பட்டுப் போகும் என்று கடுமையாக சாடியுள்ளது.
News October 15, 2025
கரூர் துயரம்: ஸ்டாலின் பேரவையில் விளக்கம்

கரூர் துயர சம்பவத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள், எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து CM ஸ்டாலின் பேரவையில் விளக்கம் அளித்து வருகிறார். உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக பல்வேறு கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டு வரவுள்ளதாகவும் CM தெரிவித்தார். கரூர் விவகாரம் குறித்து விவாதிக்க EPS கோரிக்கை வைத்த நிலையில், ஸ்டாலின் பேசி வருகிறார்.