News April 8, 2025
சென்னைக்கு 220 ரன்கள் இலக்கு

சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி வீரர் ப்ரியன்ஷ் ஆர்யாவின் அதிரடி சதத்தால் அந்த அணி 219 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க வீரரான ப்ரியன்ஷ் ஆர்யா 42 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ஷஷங்க் சிங் 36 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். சென்னை அணி மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியபோதிலும் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.
Similar News
News April 28, 2025
இது ஒன்னு போதும்.. இனி AC, ஏர் கூலர் எதுவும் தேவையில்லை!

அமெரிக்காவின் Purdue பல்கலை. விஞ்ஞானிகள், தூய வெள்ளை நிற பெயிண்ட்டை உருவாக்கியுள்ளனர். இது 98.1% சூரிய ஒளியை பிரதிபலிக்கும் திறன் கொண்டது என்பதால், பருவநிலை மாற்றம், ஆற்றல் சேமிப்பிற்கான தீர்வாக கருதப்படுகிறது. இந்த பெயிண்ட்டை பூசுவதன் மூலம், மின்சாரம் இல்லாமலேயே, அறையின் வெப்பநிலையை 8°F-ஆக குறைக்கலாம். புவி வெப்பமயமாதலை தடுக்க இது ஒரு சிறந்த கண்டுபிடிப்பாக அமைந்துள்ளது.
News April 28, 2025
வெளியேறாத பாகிஸ்தான் நாட்டவருக்கு என்ன நடக்கும்?

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தானியர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேற அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. நாட்டை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் Immigration and Foreigners Act 2025, சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ₹3 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
News April 28, 2025
அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு HAPPY NEWS!

அங்கன்வாடிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியில் ஊதியம் வழங்க தொடக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கையில், ஆசிரியர்களுக்கு காலதாமதம் இல்லாமல் ஊதியம் வழங்கப்படுவதை மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்கள் மாதம் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Share it.