News October 20, 2025
சிறப்பான சேவையில் சென்னை மெட்ரோ முதலிடம்

பயணிகளுக்கு சிறப்பான சேவை அளிப்பதில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முதல் இடம் பிடித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. ‘கம்யூனிட்டி ஆப் மெட்ரோஸ்’ என்ற அமைப்பு உலகம் முழுவதும் உள்ள 32 நகர்ப்புற மெட்ரோ ரெயில் சேவைகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டு இதை அறிவித்துள்ளது. இந்த ஆய்வில் மெட்ரோ ரெயில் சேவையின் தரம், நம்பகத்தன்மை, பாதுகாப்பு, பயன்படுத்துவதற்கு எளிமை, சவுகரியம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
Similar News
News October 20, 2025
ரேஸிங் லெஜண்ட் பத்மநாபன் காலமானார்!

இந்திய குதிரைப் பந்தய உலகின் லெஜண்ட் S. பத்மநாபன்(71) காலமானார். சென்னை ரேஸ் கிளப்பில் கரியரை தொடங்கிய இவர், தனது வாழ்நாளில் 1,000-க்கும் மேற்பட்ட குதிரை பந்தய வெற்றி வீரர்களை உருவாக்கியுள்ளார். இவரிடம் பயிற்சி பெற்றவர்கள், 3 Indian Derby Triumphs & 5 Indian Turf Invitation Cup தொடர்களிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இவரின் திடீர் மறைவு ரேஸிங் உலகை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
News October 20, 2025
பிரியங்காவின் ‘Red Hot’ தீபாவளி போட்டோஸ்!

லண்டனில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரியங்கா சோப்ராவின் ‘ரெட்-ஹாட்’ தோற்றம், அனைவரையும் கவர்ந்திழுத்தது. உலக அழகி பட்டம் வென்ற பின், தமிழில் விஜய்யுடன் ‘தமிழன்’ படம் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டில் தனக்கென தனி இடம் பிடித்த அவர், தற்போது ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். சிவப்பு அழகியாக மின்னும் அவரின் தீபாவளி லுக்ஸை மேலே ஸ்வைப் செய்து பாருங்க…
News October 20, 2025
போரை நிறுத்துவதாக மீண்டும் அறிவித்த இஸ்ரேல்

டிரப்பின் பேச்சை கேட்டு அக்.10-ல் காஸா போரை நிறுத்த இஸ்ரேல்-ஹமாஸ் முன்வந்தன. ஆனால் இதனை மீறி ரஃபாவில் இஸ்ரேல் படையை ஹமாஸ் நேற்று தாக்கியதாக குற்றம்சாட்டிய இஸ்ரேல், பதிலுக்கு வான்வழி தாக்குதலை நிகழ்த்தியது. இதில் காஸாவினர் 97 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், போரை மீண்டும் நிறுத்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அப்பாவி மக்களை கொன்றதால் இஸ்ரேலுக்கு உலக மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.