News May 7, 2025
சென்னை ஐகோர்ட் இன்று முதல் ஜூன் 1 வரை விடுமுறை!

இன்று (மே 1) முதல் MHC-க்கு கோடை விடுமுறையாகும். மே 7, 8 தேதிகளில் நீதிபதிகள் மாலா, அருள் முருகன், விக்டோரியா கெளரி ஆகியோரும், மே 14, 15, 21, 22 ஆகிய தேதிகளில் நீதிபதிகள் சுவாமிநாதன், லட்சுமி நாராயணன், நிர்மல் குமார் ஆகியோரும் அவசர கால வழக்குகளை விசாரிக்க உள்ளனர். அதேபோல், நீதிபதிகள் செந்தில் குமார் ராமமூர்த்தி, சத்திய நாராயணா பிரசாத், திலகவதி ஆகியோர் மே 28, 29 தேதிகளில் விசாரிப்பார்கள்.
Similar News
News October 14, 2025
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 3 பேருக்கு ஜாமின்

ஆம்ஸ்ராங் கொலை வழக்கில் 3 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நிலையில் சதீஷ் சிவா, ஹரிஹரன் ஆகியோருக்கு ஜாமின் வழங்கி மெட்ராஸ் HC உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, மறைந்த ரவுடி நாகேந்திரனின் மரணத்தால், இறுதிச் சடங்குகள் செய்ய அவரது மகன் அஸ்வத்தாமனுக்கு 28-ம் தேதி வரை ஜாமின் தரப்பட்டுள்ளது.
News October 14, 2025
முகாம் நடத்த அரசு பள்ளிக்கு விடுமுறையா? அண்ணாமலை

அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தலாம் என்ற அகம்பாவம் எங்கிருந்து திமுக அரசுக்கு வருகிறது என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமுக்காக திருப்பத்தூரில் உள்ள முத்தூர் அரசு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். உங்கள் கையாலாகாத்தனத்துக்கு, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களைப் பலிகடா ஆக்குவதா எனவும் கடுமையாக சாடியுள்ளார்.
News October 14, 2025
மனித வரலாற்றில் மறக்க முடியாத பெயராகும் ஆலிசா!

ஆலிசா கார்சன்(24), மனித வரலாற்றில் மறக்க முடியாத பெயராக மாறவுள்ளது. ஆம், 2033-ல் கிளம்பி, மார்ஸில் கால்வைக்கப்போகும் முதல் மனிதர் என்ற பெருமையை அவர் பெறவுள்ளார். ஆனால் இது ‘One way trip’ தான், திரும்ப வர முடியாது. மார்ஸின் புவியீர்ப்பு & மனிதனின் டெக்னாலஜி வரம்பால், திரும்ப வருவது சாத்தியமில்லை எனப்படுகிறது. இதை அறிந்தும் தனது சிறுவயது கனவுக்காக NASA-வில் அலிஷா, தீவிர பயிற்சியில் உள்ளார்.