News May 7, 2025
சென்னை ஐகோர்ட் இன்று முதல் ஜூன் 1 வரை விடுமுறை!

இன்று (மே 1) முதல் MHC-க்கு கோடை விடுமுறையாகும். மே 7, 8 தேதிகளில் நீதிபதிகள் மாலா, அருள் முருகன், விக்டோரியா கெளரி ஆகியோரும், மே 14, 15, 21, 22 ஆகிய தேதிகளில் நீதிபதிகள் சுவாமிநாதன், லட்சுமி நாராயணன், நிர்மல் குமார் ஆகியோரும் அவசர கால வழக்குகளை விசாரிக்க உள்ளனர். அதேபோல், நீதிபதிகள் செந்தில் குமார் ராமமூர்த்தி, சத்திய நாராயணா பிரசாத், திலகவதி ஆகியோர் மே 28, 29 தேதிகளில் விசாரிப்பார்கள்.
Similar News
News November 28, 2025
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழக அரசின் “முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான டிசம்பர் மாத ரேஷன் பொருட்கள் வரும் டிச.2, 3 ஆகிய தேதிகளில் நேரடியாக வீடுகளுக்கு வந்து வழங்கப்பட உள்ளது. மேற்குறிப்பிட்ட தேதிகளில் வீடுகளில் இருந்து ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
News November 28, 2025
பெண்கள் பாதுகாப்பு.. இத்தாலியில் புதிய சட்டம் அமல்

பெண்களின் பாதுகாப்பிற்காக இத்தாலி அரசு புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. பெண் என்ற காரணத்தினாலேயே ஒருவர் கொலை (Femicide ) செய்யப்பட்டால் அதற்கு வாழ்நாள் சிறை தண்டனை அளிக்கப்படும். 2024-ல் மட்டும் இத்தாலியில் 106 Femicides பதிவாகியுள்ளன. இதில் 62 பெண்கள் அவர்களின் பார்ட்னர் அல்லது Ex-பார்ட்னரின் ஆதிக்க மனப்பான்மையால் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இந்தியாவில் இதுபோன்ற சட்டம் தேவையா?


