News May 16, 2024
விரிவாக்கம் செய்யப்படும் சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுடன் புறநகரில் உள்ள 50 ஊராட்சிகளை இணைக்க முடிவு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 200 வார்டுகள், 15 மண்டலங்களாக சென்னை மாநகராட்சி தற்போது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்போரூர், மாதவரம், பொன்னேரி தொகுதிகளில் சில ஊராட்சிகளை சென்னையுடன் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வார்டுகளின் எண்ணிக்கை 250 ஆக உயருகிறது.
Similar News
News December 6, 2025
எடையை குறைக்க உதவும் ‘கொத்தமல்லி’

சமையலில் மணம், சுவைக்காக மட்டும் பயன்படுத்தப்படும் கொத்தமல்லியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். *கொத்தமல்லி விதையில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பை குறைக்க உதவுகிறது. *கொத்தமல்லி இலையில் உள்ள குவர்செடின் எனும் வேதிப்பொருள் பசியை கட்டுப்படுத்தி, கலோரிகளை எரிக்கிறது. *இதை தினமும் உணவில் சேர்த்தால், உடல் எடை குறைப்புக்கு மிகவும் உதவுகிறது *இதயம், தோல், மூளைக்கும் நல்லது.
News December 6, 2025
புயல் மீண்டும் உருவாகிறது.. கனமழை பொளந்து கட்டும்

டிட்வா புயலின் தாக்கத்தில் இருந்து தமிழகம் மீண்டு வருகிறது. இந்நிலையில், டிச.12 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. மேலும், டிச.15-ம் தேதிக்கு பிறகு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது புயலாக மாறக்கூடும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதனால், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
News December 6, 2025
பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை

தமிழக விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ONGC தளவாடங்களை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், திருவாரூர் மாவட்ட கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 2015-ல் ONGC நிறுவனத்திற்கு எதிராக போராடியபோது, பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.


