News May 16, 2024

விரிவாக்கம் செய்யப்படும் சென்னை மாநகராட்சி

image

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுடன் புறநகரில் உள்ள 50 ஊராட்சிகளை இணைக்க முடிவு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 200 வார்டுகள், 15 மண்டலங்களாக சென்னை மாநகராட்சி தற்போது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்போரூர், மாதவரம், பொன்னேரி தொகுதிகளில் சில ஊராட்சிகளை சென்னையுடன் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வார்டுகளின் எண்ணிக்கை 250 ஆக உயருகிறது.

Similar News

News December 9, 2025

ECI-க்கு ராகுல் காந்தி பரிந்துரைத்த சீர்த்திருத்தங்கள்

image

தேர்தலில் 4 முக்கிய சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என ராகுல் காந்தி லோக் சபாவில் வலியுறுத்தியுள்ளார். அதன்படி, தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன் வாக்காளர்கள் பட்டியல் அனைத்து கட்சிகளுக்கும் வழங்கப்பட வேண்டும், வாக்குபதிவு CCTV காட்சிகளை அழிக்க கூடாது, EVM-ஐ பரிசோதிக்க எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும், தேர்தல் ஆணையரின் தவறுக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

News December 9, 2025

டாஸ்மாக் கடைகள் 8 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

image

2026-ம் ஆண்டுக்கான டாஸ்மாக் விடுமுறை நாள்களை TN அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜன.16 (திருவள்ளுவர் தினம்), ஜன.26 (குடியரசு தினம்), பிப்.1 வள்ளலார் நினைவு நாள்), மார்ச் 31 (மஹாவீர் ஜெயந்தி), மே 1 (தொழிலாளர் தினம்), ஆக.15 (சுதந்திர தினம்), செப்.26 (மிலாடி நபி), அக்.2 (காந்தி ஜெயந்தி) நாள்களில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்காது. டாஸ்மாக் மூலம் தினமும் ₹100 கோடி அளவிற்கு அரசு வருவாய் ஈட்டி வருகிறது.

News December 9, 2025

குழந்தைகள் அறிவாளிகள் ஆக இந்த ஒரு பழக்கம் போதும்!

image

பெற்றோர்களே, உங்கள் குழந்தை புத்திசாலிகளாக ஆக வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு நிச்சயமாக இருக்கும். இதற்கு, ஓயாமல் நோண்டிக் கொண்டிருக்கும் செல்போன்களை ஓரங்கட்டிவிட்டு, அவர்களிடம் நல்ல புத்தகம் ஒன்றை கொடுங்கள். தினமும் இரவு நேரத்தில் 15 நிமிடங்கள் அவர்களுடன் சேர்ந்து நீங்களும் புத்தக வாசிப்பில் ஈடுபடலாம். இதை தினமும் செய்துவர அவர்களின் அறிவுத்திறன் வளரும் என டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.

error: Content is protected !!