News May 16, 2024

விரிவாக்கம் செய்யப்படும் சென்னை மாநகராட்சி

image

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுடன் புறநகரில் உள்ள 50 ஊராட்சிகளை இணைக்க முடிவு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 200 வார்டுகள், 15 மண்டலங்களாக சென்னை மாநகராட்சி தற்போது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்போரூர், மாதவரம், பொன்னேரி தொகுதிகளில் சில ஊராட்சிகளை சென்னையுடன் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வார்டுகளின் எண்ணிக்கை 250 ஆக உயருகிறது.

Similar News

News November 1, 2025

₹1,000 மகளிர் உரிமைத்தொகை.. புதிய அறிவிப்பு வந்தது

image

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மகளிர் உரிமைத்தொகை பெற, விண்ணப்பிக்க இயலாதவர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர் ஆபிஸில் நடைபெறும் குறைதீர் கூட்டங்களில் விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த மாதம் 15-ம் தேதி ₹1,000 வழங்கப்படவுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் இதுவரை 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், வரும் 14-ம் தேதி வரை அவகாசம் உள்ளது. SHARE IT.

News November 1, 2025

முட்டை போடும் அதிசய மலை!

image

சீனாவில் உள்ள ஒரு மலை, 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை முட்டையிடுகிறது தெரியுமா? குயிஷோ என்ற பகுதியில் அமைந்துள்ள Chan Da Ya என்ற மலை, Limestone, சிலிகா & சாண்ட் ஸ்டோன் போன்ற அடுக்குகளால் ஆனது. இவை காலநிலை மாற்றத்தால், இப்படி முட்டையாக விழுவதாக விளக்கமளிக்கப்படுகிறது. ஆனால், இந்த 20–60 செமீ அளவிலான முட்டை பாறைகளை அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதி, உள்ளூர் மக்கள் வீட்டில் வைத்து பூஜிக்கின்றனர்.

News November 1, 2025

கடலில் மூழ்கி பலியான 4 பேர் குடும்பத்திற்கு தலா ₹3 லட்சம்

image

எண்ணூர், பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக 4 பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இந்நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு, CM ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்த தேவகி, பவானி, ஷாலினி, காயத்ரி ஆகிய 4 பேரின் குடும்பத்திற்கும் தலா ₹3 லட்சம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!