News May 16, 2024

விரிவாக்கம் செய்யப்படும் சென்னை மாநகராட்சி

image

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுடன் புறநகரில் உள்ள 50 ஊராட்சிகளை இணைக்க முடிவு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 200 வார்டுகள், 15 மண்டலங்களாக சென்னை மாநகராட்சி தற்போது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்போரூர், மாதவரம், பொன்னேரி தொகுதிகளில் சில ஊராட்சிகளை சென்னையுடன் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வார்டுகளின் எண்ணிக்கை 250 ஆக உயருகிறது.

Similar News

News December 1, 2025

ஒரு மாசத்துக்கு இலவச பீர்.. ஆனா ஒரு கண்டிஷன்

image

USA-ல் தற்போது சட்டவிரோத குடியுரிமைக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் காட்டினால் ஒரு மாதத்துக்கு இலவச பீர் வழங்குவதாக அங்குள்ள, ‘ஓல்டு ஸ்டேட் சலுான்’ மதுபான கடை அறிவித்துள்ளது. ஏற்கெனவே, சர்ச்சையை கிளப்புவதில் இக்கடை செம்ம பேமஸ். முன்னதாக, Pride மாதத்தின் போது LGBTQ-வினருக்கு எதிராக இக்கடை விளம்பரம் ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

News December 1, 2025

BREAKING: அமளியால் முடங்கிய லோக்சபா

image

எதிர்க்கட்சி MP-க்களின் அமளியால் லோக்சபா பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. SIR நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, TMC, SP உள்ளிட்ட கட்சிகளின் MP-க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். முன்னதாக, குளிர்கால கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என <<18436891>>PM மோடி<<>> வலியுறுத்தியிருந்தார்.

News December 1, 2025

துரோகத்தின் சம்பளம் மரணம்.. மனைவி சடலத்துடன் Selfie!

image

இறந்த மனைவியின் உடலுடன் Selfie எடுத்து, ‘துரோகத்தின் சம்பளம் மரணம்’ என கணவர் ஸ்டேட்ஸ் வைத்த சம்பவம் அதிரவைத்துள்ளது. நெல்லையை சேர்ந்த பாலமுருகன், ஸ்ரீபிரியாவிற்கு திருமணமான நிலையில், ஸ்ரீபிரியா வேறொருவருடன் பழகுவதாக பாலமுருகன் குற்றம்சாட்டினார். இதனால், ஸ்ரீபிரியா கோவையிலுள்ள ஹாஸ்டலில் தனியாக வசித்து வந்துள்ளார். அவரை அழைக்க சென்ற போது நடந்த தகராறில், பாலமுருகன் ஸ்ரீபிரியாவை கொலை செய்துள்ளார்.

error: Content is protected !!