News May 16, 2024

விரிவாக்கம் செய்யப்படும் சென்னை மாநகராட்சி

image

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுடன் புறநகரில் உள்ள 50 ஊராட்சிகளை இணைக்க முடிவு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 200 வார்டுகள், 15 மண்டலங்களாக சென்னை மாநகராட்சி தற்போது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்போரூர், மாதவரம், பொன்னேரி தொகுதிகளில் சில ஊராட்சிகளை சென்னையுடன் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வார்டுகளின் எண்ணிக்கை 250 ஆக உயருகிறது.

Similar News

News December 3, 2025

அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? Ex MLA விளக்கம்

image

EPS தலைமையிலான அதிமுகவில் உழைப்பவர்களுக்கு இடம் இல்லை என அக்கட்சியில் இருந்து திமுகவில் <<18456702>>இணைந்த Ex MLA சின்னசாமி<<>> குற்றம்சாட்டியுள்ளார். சமூக ரீதியாக சாதகமான நபர்களை வைத்து EPS செயல்படுவதாகவும், தன் மீது அதிமுகவினர் பொய் வழக்கு போட்டதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும் தலைமையின் மீதுள்ள அதிருப்தியால் திமுகவில் இணைந்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

News December 3, 2025

வணிகர்கள் 4 மாதங்கள் ₹500 கட்டணமின்றி பதிவு செய்யலாம்

image

தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் கட்டணமில்லா நிரந்த உறுப்பினர் சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2026 மார்ச் 31-ம் தேதி வரை, நிரந்தர உறுப்பினராவதற்கு ₹500 கட்டணம் செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. GST சட்டத்தில் பதிவுபெற்ற மற்றும் பதிவுபெறாமல், வருடத்திற்கு ₹40 லட்சம் வரை விற்றுமுதல் அளவு (Turn Over) வியாபாரம் செய்யும் வணிகர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

News December 3, 2025

மொபைல் APP சர்ச்சை.. திரும்ப பெற்ற மத்திய அரசு

image

மொபைல் நிறுவனங்கள் ‘Sanchar Saathi’ செயலியை கட்டாயமாக Preload செய்ய வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றது. நாடு முழுவதும் இந்த செயலியை டவுன்லோடு செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக, <<18447303>>‘Sanchar Saathi’<<>> செயலி மூலம் மக்களை மத்திய அரசு வேவு பார்க்க முயல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி இருந்தன.

error: Content is protected !!