News May 16, 2024
விரிவாக்கம் செய்யப்படும் சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுடன் புறநகரில் உள்ள 50 ஊராட்சிகளை இணைக்க முடிவு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 200 வார்டுகள், 15 மண்டலங்களாக சென்னை மாநகராட்சி தற்போது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்போரூர், மாதவரம், பொன்னேரி தொகுதிகளில் சில ஊராட்சிகளை சென்னையுடன் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வார்டுகளின் எண்ணிக்கை 250 ஆக உயருகிறது.
Similar News
News November 28, 2025
அடுத்த டார்கெட் எஸ்.பி.வேலுமணியா?

2021-ல் எஸ்.பி.வேலுமணிதான் அனைத்து வேலைகளையும் கவனித்துக்கொண்டார். இம்முறையும் அவர் ஆசைப்படியே NDA கூட்டணியில் அதிமுக இணைந்தது. ஆனால் இதையெல்லாம் கவனித்த EPS அபிமானிகள் சிலர், ’வேலுமணியின் கைகள் ஓங்கினால் உங்கள் இருப்புக்கு பிரச்னையாகிவிடும்’ என EPS-யிடம் சொன்னதாக கூறப்படுகிறது. எனவே வேலுமணியை ஓரங்கட்டிவிட்டு, தனது மகன் மிதுன் கைகளில் முக்கிய பொறுப்புகளை அவர் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
News November 28, 2025
திரையில் பொன்விழா.. சூப்பர் ஸ்டாருக்கு சிறப்பு கவுரவம்!

வீட்டின் கேட்டை திறந்து சினிமாவில் அறிமுகமான ரஜினி, பாக்ஸ் ஆபீசில் தமிழ் சினிமாவுக்கு பல கேட்களை ஓபன் செய்து வைத்தார். கடந்த 50 ஆண்டுகளாக இந்திய சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டாராக திகழும் அவரை இந்திய சர்வதேச திரைப்பட விழா(IFFI) இன்று கெளரவிக்கவுள்ளது. அவரை இந்திய சினிமா கெளரவிப்பது அவருக்கு மட்டுமின்றி, தமிழ் திரையுலகிற்கே பெருமை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வாழ்த்துகள் சூப்பர் ஸ்டார்!
News November 28, 2025
அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. உறுதி செய்தார்!

CM வேட்பாளர் விஜய் என்ற நிலைப்பாட்டிலேயே தற்போது வரை தவெக உள்ளது. செங்கோட்டையன் கட்சியில் சேருவதற்கு முன்பு விஜய்யிடம் பேசியபோதும், இதே நிலையில் நீடிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே திமுகவும், அதிமுகவும் ஒன்று என நேற்று அவர் பேசியிருந்தார். இதனால், அதிமுக கூட்டணியில் விஜய் இணையலாம் என்ற பேச்சுகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தவெகவினர் கூறுகின்றனர்.


