News May 16, 2024

விரிவாக்கம் செய்யப்படும் சென்னை மாநகராட்சி

image

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுடன் புறநகரில் உள்ள 50 ஊராட்சிகளை இணைக்க முடிவு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 200 வார்டுகள், 15 மண்டலங்களாக சென்னை மாநகராட்சி தற்போது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்போரூர், மாதவரம், பொன்னேரி தொகுதிகளில் சில ஊராட்சிகளை சென்னையுடன் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வார்டுகளின் எண்ணிக்கை 250 ஆக உயருகிறது.

Similar News

News November 26, 2025

கடலூர்: இளம்பெண் மீது பாய்ந்த குண்டாஸ்!

image

கடலூர் மாவட்டம், பொயனப்பாடியில் வயிற்றில் இருக்கும் சிசுவின் பாலினத்தை ஸ்கேன் மிஷின் மூலம் கண்டறிந்து, பெண் என்றால் கருக்கலைப்புக்கு உதவிய வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், அதில் ஒருவரான காட்டுமயிலூர் மாலதி என்பவரின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில், அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

News November 26, 2025

செங்கோட்டை – திருவண்ணாமலை சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

image

திருவண்ணாமலையில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு கார்த்திகை தீப ஜோதி திருவிழாவை பார்த்து திரும்புவதற்கு வசதியாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சொகுசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. வருகிற டிச.2,3ம் தேதிகளில் தேவைக்கேற்ப விரைவு பஸ்கள் இயக்கப்படும். தேவைப்படும் பயணிகள் www.tnstc.in மற்றும் அதன் செயலி மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

News November 26, 2025

சென்னை வந்தடைந்த KAS & ஆதரவாளர்கள்

image

இன்று MLA பதவி ராஜினாமா, நாளை தவெகவில் இணைப்பு என்ற தகவலுக்கு மத்தியில், செங்கோட்டையன் சென்னை வந்துள்ளார். ஏர்போர்ட்டில் தவெகவில் இணைவது பற்றி கேட்டபோதும், அவர் மறுப்பு தெரிவிக்காமல் சென்றார். மேலும் , அவரது ஆதரவாளர்களில் பலரும் சென்னை விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவருக்கும் ரூம் புக் செய்துள்ளதாகவும், இதனால் நாளைய அரசியல் களம் பரபரப்புக்கும் என்பதில் சந்தேகமில்லை.

error: Content is protected !!