News May 16, 2024
விரிவாக்கம் செய்யப்படும் சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுடன் புறநகரில் உள்ள 50 ஊராட்சிகளை இணைக்க முடிவு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 200 வார்டுகள், 15 மண்டலங்களாக சென்னை மாநகராட்சி தற்போது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்போரூர், மாதவரம், பொன்னேரி தொகுதிகளில் சில ஊராட்சிகளை சென்னையுடன் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வார்டுகளின் எண்ணிக்கை 250 ஆக உயருகிறது.
Similar News
News December 30, 2025
தூத்துக்குடி: ஊருக்கு திரும்பிய போது விபரீதம்., 2 இளைஞர்கள் பலி

பெரியதாழை பகுதியை சேர்ந்த யோசுவா (21), சாலமோன் (20) இருவரும் நேற்று இரவு 2 பேரும் டூவீலரில் நெல்லை மாவட்டம் உவரிக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து ஊருக்கு திரும்பியபோது கூட்டப்பனை அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றனர். எதிரே வந்த வேன் பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இருவரும் படுகாயத்துடன் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்தனர். இதுகுறித்து உவரி போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 30, 2025
BREAKING: தங்கம் விலை அதிரடியாக குறைந்தது

தங்கம் விலை இன்று (டிச.30), 22 கேரட் கிராமுக்கு ₹420 குறைந்து ₹12,600-க்கும், சவரனுக்கு ₹3,360 குறைந்து ₹1,00,800-க்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை, இந்த வாரம் சரிவுடனே வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. மேலும், <<18708753>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை சரிந்து வருவதால் அதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
News December 30, 2025
புத்தாண்டு வாழ்த்து மோசடி… உஷாரா இருங்க மக்களே!

இந்த ஆண்ட்ராய்டு யூகத்தில் நடைபெறும் நூதன மோசடிகள் வரிசையில் புதிய வரவுதான் ‘புத்தாண்டு வாழ்த்து மோசடி’. தெரியாத நபர்களிடம் இருந்து WhatsApp, Telegram, Email ஆகியவற்றில் புத்தாண்டு வாழ்த்து, பரிசு, Bank Coupon என்ற பெயரில் வரும் எந்த Link-யும் திறக்கவோ, கிளிக் செய்யவோ வேண்டாம். தவறி கிளிக் செய்தால் ஆபத்தான APK file போனில் டவுன்லோடாகி தனிப்பட்ட விவரங்களை திருடிவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


