News May 16, 2024
விரிவாக்கம் செய்யப்படும் சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுடன் புறநகரில் உள்ள 50 ஊராட்சிகளை இணைக்க முடிவு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 200 வார்டுகள், 15 மண்டலங்களாக சென்னை மாநகராட்சி தற்போது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்போரூர், மாதவரம், பொன்னேரி தொகுதிகளில் சில ஊராட்சிகளை சென்னையுடன் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வார்டுகளின் எண்ணிக்கை 250 ஆக உயருகிறது.
Similar News
News December 9, 2025
விற்பனையில் தள்ளாடுகிறதா ஜனநாயகன்?

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ வியாபாரம் சரிவர போகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ‘கோட்’ படம் ₹100 கோடிக்கு விற்பனையான நிலையில், இப்படத்தை ₹120 கோடிக்கு விற்க படக்குழு திட்டமிட்டிருந்ததாம். ஆனால், தமிழக விநியோகஸ்தர்கள், நீண்ட இழுபறிக்கு பின்னரே வாங்கினார்களாம். காரணம், விஜய் அரசியலில் இறங்கியுள்ளதால், பிற கட்சியினர் படம் பார்க்க வருவார்களா என்ற தயக்கம் உள்ளதாம்.
News December 9, 2025
புதுச்சேரியில் விஜய்யின் கூட்டணி வியூகம்!

அரசியல் தலைவராக புதுவைக்கு முதல் விசிட் அடித்த விஜய், பொதுக்கூட்டத்தில் திமுக, பாஜகவை கடுமையாக விமர்சித்தார். ஆனால், அங்கு ஆட்சியில் உள்ள NR காங்கிரஸ், CM ரங்கசாமி பற்றி விமர்சனம் ஏதும் வைக்கவில்லை. மாறாக கூட்டத்திற்கு நல்ல பாதுகாப்பு அளித்த CM-க்கு நன்றி என்றார். நீண்ட காலமாக ரங்கசாமியுடன் நெருக்கமாக இருக்கும் விஜய், 2026-ல் அவருடன் கூட்டணி வைக்க வியூகம் வகுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
News December 9, 2025
பெண்களுக்கு இலவச தையல் மெஷின்: அரசின் சூப்பர் திட்டம்

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் TN அரசு பெண்களுக்கு இலவசமாக தையல் மெஷின்களை வழங்குகிறது. இதனை பெற விரும்பும் பெண்கள் 6 மாதம் தையல் பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ₹72,000-க்கு மிகாமலும், வயது 40-ஐ தாண்டாமலும் இருக்க வேண்டும். முழு தகவல்களை அறிய www.tnsocialwelfare.tn.gov.in இணையதளத்தை பார்வையிடுங்கள். SHARE.


