News March 17, 2024
செங்கல்பட்டு: மூதாட்டியிடம் மூன்று லட்சம் திருட்டு

தாம்பரம், மீனாம்பாள் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்வரி(68). இவருக்கு கைப்பேசியில் தொடர்வு கொண்ட மர்மநபர்கள் பிரபல வங்கி அதிகாரிகள் எனக் கூறி, புதிய எ.டி.எம் கார்டு வழங்குவதற்காக ஓ.டி.பி எண் கேட்டுள்ளனர். ஓ.டி.பி-யை சொன்ன அடுத்த நொடியில் வங்கி கணக்கில் இருந்து 3 லட்சம் பணத்தை திருடியுள்ளனர். இதுகுறித்து நேற்று மூதாட்டி அளித்த புகாரின் பேரில் தாம்பரம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
Similar News
News July 11, 2025
குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

▶செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
▶தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
▶ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
▶கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
▶காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
▶வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News July 11, 2025
JUST NOW: மாவட்டக்கல்வி அலுவலர் நியமனம்

தமிழக பள்ளிக்கல்வித்துறை 25 மாவட்டக்கல்வி அலுவலர்களை பணியிடம் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதன்படி செங்கல்பட்டு(மதுராந்தகம்) இடைநிலை மாவட்டக்கல்வி அலுவலராக திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த கே.காளிதாஸ் என்பவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
News July 11, 2025
ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு 1/2

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, புதிய விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காப்பீடு, ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் வரையிலான செலவுகளை கவர் செய்யக்கூடியது. விபத்தில் உயிரிழந்தால் 100% காப்பீடு தொகை வழங்கப்படும். விபத்தில் எலும்புமுறிவு ஏற்பட்டால் ரூ.25,000 வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு செங்கல்பட்டு அஞ்சல் துறையை (044 – 27433465) தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<17028580>>தொடர்ச்சி<<>>