News March 18, 2024
செங்கல்பட்டு: எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு சீல்

தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்ததை தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சியில் சுவர் ஓவியங்கள், சுவரொட்டிகள் அழித்தல், பேனர் அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தாம்பரம் மாநகராட்சி, 2ஆவது மண்டல அலுவலக வளாகத்தில் இயங்கி வந்த பல்லாவரம் தி.மு.க., எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் நேற்று, ‘சீல்’ வைத்தனர்.
Similar News
News December 2, 2025
செங்கல்பட்டு: பிறப்பு சான்றிதழ் இல்லையா? Click here

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக 1.பள்ளியில் சேர 2.அரசாங்க வேலையில் பணியமர 3.பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே இந்த <
News December 2, 2025
செங்கல்பட்டு: ஆமினி பஸ் கவிழுந்து விபத்து!

மாமல்லபுரம் அருகே கடம்பாடி கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பஸ் நேற்று நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. அதிவேகம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பேருந்தில் பயணம் செய்த 8 பேர் காயமடைந்தனர். தீயணைப்புத் துறையினர் கண்ணாடியை உடைத்து பயணிகளை மீட்டனர்; காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
News December 2, 2025
செங்கல்பட்டு: வெவ்வேறு இடங்களில் 2 பேர் பலி!

மறைமலை நகர் ஜி.எஸ்.டி. சாலையில் தனியார் பேருந்து மோதியதில், பைக்கில் சென்ற தென்காசியைச் சேர்ந்த முத்துசெல்வன் (22) உயிரிழந்தார்; அவரது 2 நண்பர்கள் படுகாயமடைந்தனர். மற்றொரு சம்பவத்தில், சிங்கப்பெருமாள் கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பலியானார். இந்த 2விபத்துகள் குறித்தும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வுப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


