News May 7, 2024
சவுக்கு சங்கர் தாக்கப்படவில்லை

கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் கைகள் உடைக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு சிறைத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரின் கண்களை கட்டி போலீசார் கடுமையாக தாக்கியதில், வலது கை உடைந்ததாக அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பரபரப்பு புகார் அளித்தார். அத்துடன், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
Similar News
News August 22, 2025
வெறிநாய்களை வெளியே விடக்கூடாது: SC

தெருநாய்களை பிடித்தாலும் அவற்றுக்கு கருத்தடை & புழுநீக்கம் செய்து, தடுப்பூசி செலுத்திவிட்டு, அவற்றை பிடித்த இடத்திலேயே மீண்டும் விட்டுவிட வேண்டும் என SC <<17481254>>தீர்ப்பளித்துள்ளது<<>>. அதேநேரம், ரேபிஸ் தொற்று பாதித்த நாய்களையும், வெறிப்பிடித்த நாய்களையும் தெருவில் விடவும் தடை விதித்துள்ளது. தெருநாய்கள் தொடர்பாக அனைத்து மாநிலங்களையும் ஆலோசித்து தேசியக் கொள்கை உருவாக்கவும் மத்திய அரசை SC வலியுறுத்தியுள்ளது.
News August 22, 2025
மதிய உணவிற்குப் பிறகு சோம்பலா.. இதை பண்ணுங்க!

ஆபிசில் இருக்கும் போது, சாப்பிட்ட பிறகு, பயங்கரமாக தூக்கம் வரும். இதனால், வேலையும் கேட்டுவிடும். அப்படி, தூக்கம் வராமல் இருக்க..
*மதியம் எளிதில் ஜீரணிக்ககூடிய உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
*நிறைய தண்ணீர் குடியுங்கள்.
*சிறிது தூரம் நடப்பது, உடலை சுறுசுறுப்பாக்கி, மந்த நிலையை விரட்டும்.
*கண்டிப்பாக காஃபினை தவிர்க்கவும்.
*தூக்கம் வந்தால், சுவாசப்பயிற்சி செய்யவும்.
News August 22, 2025
கல்வி ஒன் சைட் லவ் மாதிரி.. அன்பில் மகேஷ்

கல்வியை காதலுடன் ஒப்பிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதுதான் தற்போதைய ஹாட் டாபிக். தனியார் நிகழ்ச்சியில் பேசிய அவர், கல்வி என்பது முதலில் ஒன் சைட் லவ்வாகவே இருக்கும், பிறகு நீங்கள் அதனை காதலிக்க தொடங்கியதும் அது டபுள் சைட் லவ்வாக மாறிவிடும்’ எனக் கூறியுள்ளார். எனவே, மாணவர்கள் அடுத்தடுத்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். நீங்க என்ன நினைக்கிறீங்க?