News May 8, 2024
சவுக்கு சங்கரின் தாய் நீதிமன்றத்தில் வழக்கு

பெண் போலீஸ் குறித்து அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அண்மையில் கைது செய்யப்பட்டார். சிறையில் இருக்கும் சங்கரை அடித்து துன்புறுத்துவதாக அவரது வழக்கறிஞர் பேசியதையடுத்து, சவுக்கு சங்கரின் தாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது மகனை அடித்து துன்புறுத்துவது தொடர்பாக நீதி விசாரணையை வேண்டும் என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Similar News
News September 24, 2025
வரலாற்றில் இன்று

*1950 – கிரிக்கெட் வீரர் மொகிந்தர் அமர்நாத் பிறந்த தினம்
*1996 – ஐ.நா.வின் அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாட்டில் 71 நாடுகள் கையெழுத்திட்டன
*2007 – T20 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்ற நாள்
*2014 – மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்டது
*2015 – சவூதி அரேபியா ஹஜ் பயண கூட்டத்தில் சிக்கி 1,100 பேர் உயிரிழந்தனர்
News September 24, 2025
விலை குறைத்த அத்யாவசிய பொருள்கள்

GST வரி குறைப்பால் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களின் விலை குறைந்துள்ளது. அதில் சிலவற்றின் விலை பட்டியல் இதோ: அமுல் வெண்ணெய்(₹4 – ₹58வரை ), அமுல் நெய் (₹40 – ₹610), Maggi (₹4 600G), Nescafe(₹30), Sunfest marie light (₹20), nutella (₹5- ₹399), டாபர் ஜூஸ் (₹8) உள்ளிட்டவைகளின் விலை குறைந்துள்ளது. அதேபோல் ஹார்லிக்ஸ், கிஷான் ஜாம், ப்ரூ காபி உள்ளிட்டவையின் விலையும் குறைந்துள்ளது.
News September 24, 2025
தனி நாடு அந்தஸ்து பாலஸ்தீனத்தின் உரிமை: ஐநா

ஐநா பொதுக்கூட்டத்தில் பாலஸ்தீன பிரச்னையை முதன்மையாக கொண்டு ஐநா பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டேரெஸ் உரையாற்றினார். அதில் தனி நாடு அந்தஸ்து பாலஸ்தீனத்திற்கு நாம் வழங்கும் சலுகை அல்ல, அது அவர்களின் உரிமை என திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலும் பாலஸ்தீனமும் பரஸ்பர ஒத்துழைப்புடன் அண்டை நாடுகளாக வாழ வேண்டும் என கூறிய அவர், 1967 ஆம் ஆண்டு நிலவரப்படி எல்லைகள் தீர்மானிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.