News July 10, 2024

சவுக்கு சங்கர் வழக்கும், கமிஷனர் பதவியும்?

image

பெண் காவலர் குறித்த சர்ச்சை கருத்துக்கு சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட பின்னணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியும், தற்போதைய சென்னை கமிஷனருமான அருண் இருந்ததாகப் பேசப்பட்டது. இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையை அடுத்து காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடம் மாற்றப்பட அப்பதவியில் அருண் நியமிக்கப்பட்டுள்ளார். சங்கர் வழக்கை திறமையாக கையாண்டதால் இப்பதவி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Similar News

News December 7, 2025

சற்றுமுன் அதிரடி கைது

image

திமுக முன்னாள் எம்பி ஏ.கே.எஸ்.விஜயனின் தஞ்சை வீட்டில் கடந்த வாரம் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்நிலையில், தருமபுரியை சேர்ந்த ரசூல், சாதிக் பாஷா, மொய்தீன், பர்வீன் ஆகியோரை போலீசார் கைது செய்து, 87 சவரன் நகைகளை மீட்டுள்ளனர். மீதமுள்ள நகைகள் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

News December 7, 2025

அரசியலில் குதிக்கிறாரா விஜய் சேதுபதி?

image

’சீக்கிரமே ஓட்டு கேட்டு வரேன்’ என Bigg Boss-ல் கூறியிருந்தார் விஜய் சேதுபதி. இதனால் அவர் அரசியலுக்கு வரப்போகிறாரா என SM-ல் கேள்வி எழுந்தது. ஆனால், அந்த நோக்கத்தில் அவர் அதை சொல்லவில்லை. சனிக்கிழமை எபிசோடில் VJS-யிடம் BB Contestants பற்றி ஆடியன்ஸ் புகார் வைத்தனர். இதை கேட்ட VJS, ‘ஏதோ தொகுதி மக்களிடம் குறை கேட்டு வந்தது போல் இருப்பதாகவும், சீக்கிரமே ஓட்டு கேட்டு வரேன்’ எனவும் காமெடியாக சொன்னார்.

News December 7, 2025

தர்மம் மீண்டும் வெல்லும்: ராமதாஸ்

image

<<18492965>>PMK உள்கட்சி<<>> விவகாரத்தில் தலையிட EC-க்கு அதிகாரம் இல்லை என டெல்லி HC தெரிவித்தது. இந்நிலையில், 46 ஆண்டுகள் உழைத்து வளர்த்த பாமகவை, என்னிடம் இருந்து பறிக்க செய்த சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் கட்சியின் அங்கீகாரத்தை மீட்பேன் என்று கூறியுள்ள அவர், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மீண்டும் வெல்லும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!