News October 24, 2024

கல்வித்துறை உள்கட்டமைப்பு மாறுகிறது: எல்.முருகன்

image

தேசிய கல்விக் கொள்கையால் கல்வித்துறையின் உள் கட்டமைப்பு மாறி வருவதாக, எல்.முருகன் கூறியுள்ளார். பன்முகத் தன்மை கொண்ட கல்வியை, மன ஆரோக்கிய முயற்சி மற்றும் வேலைவாய்ப்பு சந்தை தேவைக்கு ஏற்ப மாணவர்களை உருவாக்குவதே NEP எனக் குறிப்பிட்ட அவர், சர்வதேச அளவில் இந்திய இளைஞர்கள் போட்டி போட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், கல்வித்துறையில் மத்திய அரசு பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Similar News

News January 12, 2026

இவர் தூய்மை பணியாளர் மட்டுமில்ல.. தூய்மையானவர்!

image

மனித மனம் எப்போதும் தடுமாறக்கூடியதே. ஆனால், சென்னையை சேர்ந்த பத்மா, தன் வேலையை போலவே மனதளவிலும் தூய்மையானவராகவே உள்ளார். சென்னை தி.நகரில் அவர் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த போது, 45 சவரன் தங்க நகைகள் கிடைத்துள்ளன. உடனே, அதனை அவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். சுமார் ₹48 லட்சம் மதிப்பிலான நகைகளை தவறவிட்ட ரமேஷ் என்பவரிடம் நகை ஒப்படைக்கப்பட, பத்மாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன. Salute மேடம்!

News January 12, 2026

18 வருஷ வெயிட்டிங் ஓவர்! மீண்டும் டபுள் டக்கர் பஸ்!

image

1970-ல் கம்பீரமாக வலம் வந்த டபுள் டக்கர் பஸ்கள் சென்னையின் அடையாளமாகவே இருந்தன! பஸ்சின் மேல்தளத்தில் வேடிக்கை பார்த்து பயணிக்கவே, சுற்றுலா பயணிகள் சென்னைக்கு படையெடுத்த காலமது! ஆனால், அதிக பராமரிப்பு செலவு காரணமாக 2008-ல் சேவை நிறுத்தப்பட்டது. 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இன்று டபுள் டக்கர் பஸ் சேவையை CM ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள நிலையில், இது பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் என நம்பப்படுகிறது.

News January 12, 2026

காங்கிரஸாரின் கருத்தை கேட்க முடியாது: அமைச்சர்

image

திமுக கூட்டணியில் காங்., மதில் மேல் பூனையாக இருப்பதாக பேசப்பட்டுவருகிறது. இந்நிலையில், காங்கிரஸுக்கு சாதகமான தொகுதிகளை ஒதுக்கிவிட்டதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். காங்கிரஸில் ஆயிரம் பேர் ஆயிரத்தெட்டு கருத்துகளை சொல்வார்கள்; அதையெல்லாம் கேட்க முடியாது எனவும் கூறியுள்ளார். மேலும், கூட்டணி நலன் குறித்து காங்கிரஸ் தலைவருடன் பேசி திமுக தலைவர் முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!