News August 6, 2024
மாறிய காட்சிகள்.. தப்பியோடிய வங்கதேச அமைச்சர் கைது

வங்கதேச கலவரத்தால் அந்நாடே ரத்த பூமியாக காட்சியளிக்கிறது. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வந்துவிட்டார். ஹசீனா அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் விரட்டி விரட்டி கைது செய்யப்படுகின்றனர். அந்த வகையில், ஐடி அமைச்சராக இருந்த ஜுனைத் அகமது வெளிநாடு தப்பிப்பதற்காக டாக்கா விமான நிலையத்துக்கு மாறுவேடத்தில் இன்று வந்தார். அவரை அடையாளம் கண்ட ராணுவத்தினர் ஜுனைத் அகமதை கைது செய்தனர்.
Similar News
News November 25, 2025
மானாமதுரை: 16 வயது சிறுமி கர்ப்பம்..இளைஞர் மீது போக்சோ

மானாமதுரை மூங்கில் ஊரணி பகுதியைச் சேர்ந்த ராமர் (23) என்ற இளைஞர் 16 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் இந்நிலையில் அச்சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.அச்சிறுமி மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ராமர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 25, 2025
மயிலாடுதுறை: வெளுத்து வாங்கிய கனமழை

மயிலாடுதுறை மாவட்டம் மங்கநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மழை குறைந்து வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரம் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்தது தொடர் மழையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
News November 25, 2025
உங்கள் ஆயுளை நீட்டிக்கும் சீந்தில் மூலிகை..

100 வயது வரை எந்த உடல்நலப் பிரச்னையுமின்றி வாழ இயற்கை கொடுத்த மருந்தே சீந்தில் மூலிகை. சீந்திலின் இலை & தண்டுகளை இரவு முழுவதும் ஊற வையுங்கள். காலையில் இதனை இடித்து தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நீர் பாதியாக வற்றிய பின் வடிகட்டி குடிக்கவும். இப்படி செய்துவர, செரிமான பிரச்னை, சுகர், மூலம், மஞ்சள் காமாலை என சகல நோய்களும் நீங்கும் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.


