News August 6, 2024

மாறிய காட்சிகள்.. தப்பியோடிய வங்கதேச அமைச்சர் கைது

image

வங்கதேச கலவரத்தால் அந்நாடே ரத்த பூமியாக காட்சியளிக்கிறது. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வந்துவிட்டார். ஹசீனா அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் விரட்டி விரட்டி கைது செய்யப்படுகின்றனர். அந்த வகையில், ஐடி அமைச்சராக இருந்த ஜுனைத் அகமது வெளிநாடு தப்பிப்பதற்காக டாக்கா விமான நிலையத்துக்கு மாறுவேடத்தில் இன்று வந்தார். அவரை அடையாளம் கண்ட ராணுவத்தினர் ஜுனைத் அகமதை கைது செய்தனர்.

Similar News

News December 1, 2025

காலையில் கல்யாணம்.. மாலையில் விவாகரத்து!

image

உ.பி.,யில் சொந்த பந்தங்களின் ஆரவாரத்தில் பூஜா – விஷால் என்ற தம்பதிகளுக்கு நவம்பர் 26-ம் தேதி காலை திருமணம் நடந்துள்ளது. புகுந்த வீட்டுக்கு சென்ற 20 நிமிடத்திலேயே, என்ன காரணம் என கூறாமல் இந்த திருமணம் பிடிக்கவில்லை என பூஜா விடாப்பிடியாக கூறியுள்ளார். ஊராரை கூட்டி, 5 மணி நேரமாக பேசி பார்த்தும் பூஜா மனம் மாறாததால், விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டு, அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார் விஷால்.

News December 1, 2025

லோக்சபாவில் 3 மசோதாக்கள் அறிமுகம்

image

வாக்கு திருட்டு மற்றும் SIR குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டதால், லோக்சபா இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் நாளை காலை 11 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மணிப்பூர் ஜிஎஸ்டி 2-வது திருத்த மசோதா, <<18433013>>மத்திய கலால் வரி திருத்த மசோதா<<>> உள்ளிட்ட 3 மசோதாக்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் அறிமுகம் செய்தார்.

News December 1, 2025

உடனடியாக நிவாரணம் வழங்க CM ஸ்டாலின் உத்தரவு

image

டிட்வா புயலால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் இடங்களில் நடைபெறும் பணிகளை தொடந்து கண்காணித்து வருதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அக்டோபர் மாதம் பெய்த மழையால் 33% மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, நிவாரணம் வழங்க ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம் 4,235 ஹெக்டேர் வேளாண் பயிர்கள், 345 ஹெக்டேர் தோட்ட கலை பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!