News January 19, 2025
விஜய்யின் பரந்தூர் பயணத் திட்டத்தில் மாற்றம்

ஏகனாபுரம் அம்பேத்கர் திடலில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அந்த இடத்திற்கு பதிலாக, நாளை வீனஸ் திருமண மண்டபத்தில் பரந்தூர் ஏர்போர்ட்டுக்கு எதிராகப் போராடி வரும் மக்களை விஜய் சந்திக்க உள்ளார். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு போராட்டக்களத்தில் முதல்முறையாக, விஜய் மக்களை சந்திக்கிறார். 900 நாட்களுக்கும் மேலாகப் போராடி வரும் மக்களைச் சந்திப்பதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Similar News
News March 6, 2026
தாயுமானவர் பொன்மொழிகள்

*நல்ல மனதுக்கு உலகம் நல்லதாகவும், கெட்ட மனதுக்கு உலகம் கெட்டதாகவும் தென்படுகிறது *நல்லெண்ணம் வளர வளர அது நமது உடலில் ஊறியதாக ஆகிவிடுகிறது. பிறகு கெட்ட எண்ணம் என்பதே வருவதில்லை. இது எல்லாவற்றிற்கும் அடிப்படை பழக்கமே *நல்ல எண்ணம் நமக்கு நல்ல நலம் தந்து, வாழ்வினை வளமடையச் செய்கிறது *ஒழுக்கத்தில் நிலைநின்றவர்களுக்கு மன உறுதி அதிகரிக்கிறது. பின்னர் அதுவே ஆத்ம சக்தியாக வடிவம் எடுக்கிறது.
News March 6, 2026
ஈரானின் உயர் தலைவரை தேர்வு செய்வேன்: டிரம்ப்

ஈரானின் புதிய உயர் தலைவரை தேர்ந்தெடுப்பதில் தனது பங்கு இருக்கும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உயர் தலைவராக கமேனியின் மகன் முஜ்தபா பதவியேற்பதை தான் விரும்பவில்லை என தெரிவித்த அவர், அமைதியை நிலைநாட்டக் கூடிய ஒருவர் பதவிக்கு வரவேண்டும் என்றார். ஈரானியர்கள் நேரத்தை வீணடித்து கொண்டிருப்பதாகவும், வெனிசூலாவை போல ஈரானின் உயர் தலைவர் தேர்வில் தனது தலையீடு இருக்கும் எனவும் அவர் கூறினார்.
News March 6, 2026
மாணவர்களை தவிக்க விட்ட திமுக அரசு: அன்புமணி

வருவாய்த்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் சாதி & வருவாய்ச் சான்றிதழ்களை பெற முடியாமல் மாணவர்கள் தவிப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார். அதுபோல, கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பதற்கான அடங்கல் ஆவணமும் உழவர்களுக்கு கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார். எனவே, வருவாய்த் துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றி, போராட்டத்தை திமுக அரசு முடிவுக்கு கொண்டு வருமாறு அவர் X பதிவில் வலியுறுத்தியுள்ளார்.


