News September 25, 2025
விஜய்யின் பரப்புரை பயணத்தில் மாற்றம்

விஜய்யின் கடலூர் பரப்புரை பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பு நவ.22-ம் தேதி திட்டமிட்டிருந்த இந்த பயணம் அக்.11-ம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர் தலைமை தபால் நிலையம், உழவர் சந்தை ஆகிய இடங்களில் பரப்புரைக்கு அனுமதி கேட்டு, கடலூர் எஸ்.பி.க்கு தவெக தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் விஜய் கரூர் மற்றும் நாமக்கல்லில் பரப்புரை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 25, 2025
தமிழகத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

வடக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. முக்கியமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
News September 25, 2025
கட்சியில் அடுத்த வாரிசுக்கு பதவி.. வெடித்தது சர்ச்சை

துணை ஜனாதிபதி CP ராதாகிருஷ்ணனின் மகன் ஹரிசஷ்டிவேல் ராதாகிருஷ்ணனுக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு, திறன் மேம்பாட்டு பிரிவு மாநில இணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே நயினார் நாகேந்திரனின் மகன் பாலாஜிக்கு மாநில பொறுப்பு வழங்கப்பட்டது வாரிசு அரசியல் என சர்ச்சையான நிலையில், இதையும் DMK, NTK-வினர் விமர்சித்து வருகின்றனர். உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.
News September 25, 2025
TN கல்வி நிகழ்ச்சியில் பங்கேற்கும் தெலங்கானா CM

சென்னையில் இன்று நடைபெறும் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில் தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி பங்கேற்க உள்ளார்.2025-26-ம் ஆண்டுக்கான புதுமைப்பெண், நான் முதல்வன் திட்டங்களை CM ஸ்டாலினுடன் இணைந்து, ரேவந்த் ரெட்டி தொடங்கி வைக்க உள்ளார். கல்வி சார்ந்த 5 முக்கிய திட்டங்களையும், சாதனைகளையும் முன்னிலைப்படுத்தி இவ்விழா 7 பகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளது.