News August 3, 2024
தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்

மதுரையில் தண்டவாள பராமரிப்புப்பணிகள் நடைபெற உள்ளதால், தென் மாவட்ட ரயில் போக்குவரத்தில் ஆக.5ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை-ராமநாதபுரம் ரயில் 5, 6,8,9,11 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை – குருவாயூர் ரயில் 4,5,8,10 தேதிகளில் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை- செங்கோட்டை ரயில் 8ம் தேதி மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Similar News
News January 18, 2026
மாமல்லபுரம்: பொங்கல் நாளில் பெரும் சோகம்!

மாமல்லபுரத்தில், நேற்று முன்தினம் (ஜன.16), கல்லூரி மாணவர்கள் இருவர் சுற்றுலா வந்த நிலையில் மாலை, கடற்கரையில் குளிக்க சென்றனர். அப்போது மாணவர்கள் இருவரும் எதிர்பாரத விதமாக ராட்சத அலையில் சிக்கி மாயமாகினர். இதனையடுத்து ஒருவரின் உடல் கரை ஒதுங்கிய நிலையில், மற்றொரு மாணவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News January 18, 2026
இன்று தை அமாவாசை.. இதை மட்டும் பண்ணாதீங்க

☆முன்னோர்களுக்கான இந்நாளில் தெய்வம் சம்பந்தப்பட்ட பூஜைகளை ஒத்தி வைப்பது நல்லது. அவற்றை மாலை நேரத்தில் மேற்கொள்ளலாம் ☆வீட்டார் அசைவம் சாப்பிடக்கூடாது ☆தர்ப்பணம் செய்ய வேண்டிய பொருள்களை பிறரிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது. இயன்றவற்றை வைத்து தர்ப்பணம் கொடுக்கலாம் ☆வீட்டு வாசலில் கோலமிடக்கூடாது ☆இந்நாளில் கோபம், அவதூறு வார்த்தை பேசுதல், எதிர்மறையாக பேசுதல் போன்றவற்றை செய்யக்கூடாது. SHARE IT.
News January 18, 2026
போராட்டத்தில் குதிக்கும் புதிய சங்கம்

அரசு ஊழியர், ஆசிரியர்களின் பல்வேறு சங்கங்களின் கூட்டாக ஜாக்டோ-ஜியோ குழு இருந்தது. இந்த குழுவின் செயல்பாட்டில் திருப்தி இல்லாத உறுப்பினர்களால் போட்டா-ஜியோ என்ற அமைப்பு உருவானது. இந்த 2 சங்கங்களும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை அமல்படுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது புதிதாக ஆக்டோ-ஜியோ என்ற சங்கம் உருவாகியுள்ளது. இந்த சங்கமும் போராட்டத்தை அறிவித்துள்ளது.


