News March 28, 2025
CA தேர்வு முறையில் மாற்றம்!

மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கும் வகையில், CA தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்து இந்திய தணிக்கை துறை அறிவித்துள்ளது. அதன்படி, இதுவரை ஆண்டுக்கு 2 முறை நடத்தப்பட்டு வந்த CA இறுதித்தேர்வு, Intermediate, Foundation தேர்வுகளும் இனி ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இறுதித்தேர்வு ஜனவரி, மே, செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 31, 2025
₹500-க்காக இளைஞர் குத்திக்கொலை!

பணம் மனிதனை மிருகமாக்கும் என்ற சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. நியூ உஸ்மான்பூரில் உள்ள பூங்காவில் அமர்ந்திருந்த தில்ஷித் என்ற நபரிடம் 2 சிறுவர்கள் உட்பட மூவர் பணம் பறிக்க முயன்றனர். தன்னிடம் இருந்த ₹500 தரமறுத்து அவர்களுடன் தில்ஷித் மல்லுக்கட்ட, திடீரென கத்தியை எடுத்து அவரை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். தப்பியோடிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
News March 31, 2025
செங்கல்பட்டு மாவட்ட தவெக தலைவர் காலமானார்

செங்கல்பட்டு மாவட்ட தவெக தலைவர் சூரிய நாராயணன் (36) உடல்நலக்குறைவால் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கட்சி நிர்வாகிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த 15ஆம் தேதி, அக்கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் சஜி மாரடைப்பால் உயிரிழந்தது கவனிக்கத்தக்கது.
News March 31, 2025
BREAKING: திபெத்தில் நிலநடுக்கம்

திபெத்தில் அதிகாலை 3.24 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் சுமார் 170 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5ஆகப் பதிவாகியுள்ளது. மியான்மர், தாய்லாந்து நாடுகளில் இரு தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கங்களால் இதுவரை 2,500 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அடுத்தடுத்து நிலநடுக்கங்களால் பொதுமக்கள் நிம்மதியை இழந்து சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.