News March 4, 2025

அதிமுக கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம்

image

பாஜகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு 6 மாதங்கள் கழித்து முடிவெடுப்போம் என இபிஎஸ் கூறியுள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக பாஜகவுடன் கூட்டணியே இல்லை என அழுத்தமாக பேசி வந்த அவர், தனது நிலைப்பாட்டை திடீரென மாற்றியுள்ளார். சேலத்தில் பேசிய அவர் DMK மட்டுமே தங்கள் எதிரி எனவும் தேர்தல் நெருங்கும் போதுதான் யார் யார் உடன் இருப்பார்கள் எனத் தெரியும் என்றார்.

Similar News

News March 4, 2025

EPS பேச்சால் DMDK அதிருப்தி.. கூட்டணியில் விரிசல்?

image

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த மாதம் 12ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தபோதே தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டு என உடன்படிக்கை கையெழுத்தானதாக கூறியிருந்தார். அதனை இபிஎஸ் மறுத்துள்ளது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் யார் சொல்வது உண்மை?

News March 4, 2025

அதிமுகவில் அனைவருமே தலைவர்கள் தான்: இபிஎஸ்

image

அதிமுகவில் இருக்கும் அனைவருமே தலைவர்கள் தான் என இபிஎஸ் கூறியுள்ளார். அனைத்து மக்களுக்கும் சொந்தமான கட்சி எனவும், அதிமுகவில் மட்டும் தான் சாதாரண தொண்டர்கள் கூட உச்சபட்ச அதிகாரத்திற்கு வர முடியும் என்றும் பெருமிதம் தெரிவித்தார். தங்களை பலர் முடக்க பார்த்தும் முடியவில்லை என கூறிய அவர், தங்களின் ஒரே எதிரி திமுக மட்டும் தான் என்றார். மேலும், திமுகவை வீழ்த்த தாங்கள் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

News March 4, 2025

Driver போதையில் இருந்தாலும், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு

image

விபத்தை ஏற்படுத்திய டிரைவர் குடிபோதையில் இருந்தாலும், இறந்தவரின் குடும்பத்திற்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சென்னையில் 2017ல் சாலையில் நடந்துசென்ற ராஜசேகர் என்பவர் வேன் மோதி உயிரிழந்தார். ஓட்டுநர் போதையில் இருந்ததால் காப்பீட்டு நிபந்தனைகளை மீறுவதாக கூறி, இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு மறுக்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!