News September 4, 2025
+2 பொதுத்தேர்வில் மாற்றம்.. தமிழக அரசு அறிவிப்பு

10 KM தூரத்திற்கு மேல் பயணம் செய்து பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே சென்டர் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. Exam சென்டருக்கு விண்ணப்பிக்கும் பள்ளிகள் அரசு அங்கீகாரம் பெற்றிருக்கவேண்டும் எனவும், வரும் 15-ம் தேதிக்குள் கருத்துருவை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தேர்வுத்துறை இயக்குநர் சசிகலா ஆணையிட்டுள்ளார். அரசின் இந்த முடிவால் பல லட்சம் பள்ளி மாணவர்கள் பலனடைவர்.
Similar News
News September 4, 2025
ரத்த நிலவை காண ரெடியாகுங்க!

வரும் 7-ம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது. சூரியனுக்கும், நிலவுக்கும் இடையே பூமி பயணிப்பதால், செந்நிற ஒளியில் நிலவு பிரகாசிக்கும். இதனால், இதை ‘ரத்த நிலவு’ என வானியலாளர்கள் வர்ணிக்கின்றனர். இரவு 8:58-க்கு தொடங்கும் இந்த கிரகணம், நள்ளிரவு 2:25 வரை நிகழ்ந்தாலும், இரவு 11 முதல் 12:22 மணி வரை ரத்த நிலவு முழுமையாக பிரகாசிக்கும். மொட்டை மாடியில் நின்றும் வெறும் கண்களால் இந்த அரிய நிகழ்வை காணலாம்.
News September 4, 2025
SCIENCE: உங்க Dead Skin Cells காற்று மாசை குறைக்குதா?

மனித உடலில் இருந்து 1 மணி நேரத்திற்கு 200 மில்லியன் Dead Skin Cells-களும், 1 நாளுக்கு 5 பில்லியன் Dead Skin Cells-களும் உதிருது. இந்த இறந்த செல்கள், காற்று மாசை குறைப்பதாக ஆய்வுகள் சொல்கிறது. ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், இந்த இறந்த செல்களில் உள்ள Cholesterol மற்றும் Squalene, காற்றில் இருக்கக்கூடிய ozone போன்ற நச்சுக்களின் அளவை 15% வரை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. SHARE.
News September 4, 2025
டாஸ்மாக் கடைகள் நாளை இயங்காது

நபிகள் நாயகம் பிறந்த தினமான நாளை(செப்.5) மிலாடி நபி கொண்டாடப்படுகிறது. இதனால், மாநிலம் முழுவதும் உள்ள அரசு டாஸ்மாக்(TASMAC) கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்களில் நாளை மது விற்பனை செய்யக்கூடாது என அரசு அறிவித்துள்ளது. விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.