News June 6, 2024
பதவியேற்பை ஒத்தி வைத்தார் சந்திரபாபு

ஆந்திராவின் புதிய முதல்வராக பொறுப்பேற்கவிருக்கும் சந்திரபாபு நாயுடு, இந்த வாரமே பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி 8ஆம் தேதி பதவியேற்கவுள்ளதால், தனது பதவியேற்பு விழாவை அவர் ஒத்தி வைத்திருக்கிறார். ஜூன் 12ஆம் தேதி ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது. முன்னதாக, பிரதமர் பதவியேற்பு விழாவில் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.
Similar News
News September 23, 2025
இருமொழிக் கொள்ளையில் சாதித்த தமிழகம்: அன்பில்

தமிழக அரசு மும்மொழிக் கொள்கையில் அரசியல் செய்ய வேண்டாம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்ததற்கு, அன்பில் மகேஸ் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடு திறன் வாய்ந்த மாநிலமாக இருக்க இருமொழிக் கொள்கைதான் காரணம் என அவர் விளக்கியுள்ளார். மேலும் இந்த இருமொழிக் கொள்கையில் படித்த தமிழர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர் எனவும் அன்பில் மகேஸ் குறிப்பிட்டுள்ளார்.
News September 23, 2025
இந்தியாவில் பரவும் வைரஸ் காய்ச்சல்.. அறிகுறிகள் என்ன?

இந்தியாவில் H3N2 வைரஸ் பரவலால் பலரும் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். உடல் வலி, சோர்வு, வறண்ட தொண்டை, தலைவலி, ஜலதோஷம், காய்ச்சல் இதன் அறிகுறிகளாகும். H3N2 வைரஸால் நீங்கள் பாதிக்கப்பட்டால் அதிகமாக தண்ணீர் குடிக்கவும், போதுமான நேரம் தூங்குங்கள், வெளியே செல்லாதீர்கள். மேற்கண்ட அறிகுறிகள் உள்ள குழந்தைகள், முதியவர்கள் டாக்டரை உடனடியாக அணுகி ஆலோசனை பெற்று மருந்து மாத்திரை சாப்பிடவும்.
News September 23, 2025
விஜய்யை திமுக முடித்துவிடும்: ராஜேந்திர பாலாஜி

தனித்து தேர்தலில் போட்டியிட்டால் திமுக விஜயை முடித்துவிடும் என ராஜேந்திர பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். EPS துணையில்லாமல் தவெக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் விஜயகாந்தின் தொண்டர்கள் போல, விஜய்யின் தொண்டர்கள் பக்குவம் அடையவில்லை என தெரிவித்த அவர், அரசியல் களத்தில் தவெக பெரும் தடுமாற்றத்தை சந்திக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.