News April 12, 2025
தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் காலை 10 மணிவரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (MET) தெரிவித்துள்ளது. அதேபோல், திருப்பூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாகை, அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெளியே செல்வோர் முன்னெச்சரிக்கையாக குடையுடன் செல்லுங்கள்..
Similar News
News November 24, 2025
கடலூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை

கடலூர் மாவட்டத்தில் கன மழை காரணமாக முதலில் நான்கு தாலுகாக்களுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்தார், இந்நிலையில் கனமழை எச்சரிக்கையை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.24) விடுமுறை அளித்து கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் மறு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
News November 24, 2025
BREAKING: மொத்தம் 17 மாவட்டங்களில் விடுமுறை

கனமழை எதிரொலியால் மேலும் 3 மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, <<18372068>>14 மாவட்டங்களுக்கு<<>> விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிதாக மதுரை, அரியலூர், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளனர். இன்னும் சில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News November 24, 2025
திமுகவுக்கு, தவெக என்றாலே ஒரு உறுத்தல்: டிடிவி தினகரன்

திமுகவுக்கு தவெக என்றாலே உறுத்தலாக இருப்பது அவர்களின் பேச்சிலேயே தெரிவதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். கூட்டணி பற்றி பல கட்சிகள் பேசுவதாக கூறிய அவர், அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என மீண்டும் உறுதியாக கூறியுள்ளார். சமீபகாலமாக இவர் விஜய்க்கு ஆதரவான கருத்துகளை பேசி வருவதால், அமமுக தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.


