News April 12, 2025
தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் காலை 10 மணிவரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (MET) தெரிவித்துள்ளது. அதேபோல், திருப்பூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாகை, அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெளியே செல்வோர் முன்னெச்சரிக்கையாக குடையுடன் செல்லுங்கள்..
Similar News
News November 28, 2025
கசப்பு தான், ஆனாலும் இது அவ்வளவு நல்லது!

பாகற்காய் கசப்பாக இருப்பதால் பெரும்பாலானோர் அதை சாப்பிட மாட்டார்கள். ஆனால் பாகற்காய் ஜூஸை வாரத்திற்கு இருமுறை குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்கின்றனர் டாக்டர்கள். *உடலின் ஆற்றலை மேம்படுத்தும் *வலிமையை அதிகரிக்கும் *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் *ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் *செரிமானத்திற்கு நல்லது *மலச்சிக்கல் சரியாகும் *வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும். *ஆஸ்துமாவை தடுக்க உதவும்.
News November 28, 2025
கொந்தளித்த பிரித்விராஜ் தாய்

பிருத்விராஜின் தாய் மல்லிகா, தனது மகன் வேண்டுமென்றே மீது சைபர் தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். சமீபத்தில் பிருத்விராஜ் நடித்த ‘விலயாத் புத்தா’ படம் மற்றும் படக்குழுவினர் மீது SM-யில் கடுமையான எதிர்மறை விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் மல்லிகா, ‘என் மகன் மீது திட்டமிட்டே வெறுப்பு பரப்பப்படுகிறது. SM-யில் அவரை அவமதிப்பதை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
டிட்வா புயலின் வேகம் குறைந்தது: IMD

சென்னையில் இருந்து 510 கிமீ தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. மணிக்கு 4 கிமீ வேகத்தில் பயணித்து வந்த புயல் இப்போது 3 கிமீ அளவுக்கு தனது வேகத்தை குறைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. டிட்வா புயலின் தாக்கத்தால் ஏற்கெனவே 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


