News April 29, 2025
இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியிலும் மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News November 19, 2025
தமிழ் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து கவனம் பெற்றவர் துளசி. இவர் சர்க்கார், சுந்தரபாண்டியன், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, அம்மா கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி இருக்கிறார். இந்நிலையில், வரும் டிசம்பர் 31 முதல் சினிமாவில் இருந்து ஓய்வு பெற போவதாக அவர் அறிவித்துள்ளார். 1970-களில் தொடங்கிய அவரது சினிமா பயணம், 2025-ல் முடிவடைந்துள்ளது.
News November 19, 2025
நாட்டிற்கு எதிராக இருந்தால் ஏற்க மாட்டோம்: பியூஷ் கோயல்

அமெரிக்க வரிவிதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இருதரப்புக்கும் பயனுள்ளதாக இருந்தால் மட்டுமே இறுதி அறிவிப்பு வெளிவரும். நம் நாட்டின் பொருளாதார முன்னுரிமைகளுக்கு எதிராக இருந்தால், அந்த ஒப்பந்தத்தில் நிச்சயம் இந்தியா கையெழுத்திடாது. மீனவர்கள், சிறுதொழில்களின் நலன்கள் உறுதிபடுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
News November 19, 2025
Business Roundup: UPI-ல் தனியார் வங்கிகள் கடன் சேவை

*இ-காமர்ஸ் ஏற்றுமதியாளர்களுக்கு பிரத்யேக கிரெடிட் கார்டு வழங்கப்பட உள்ளது. *இந்தியாவின் விமான சரக்கு ஏற்றுமதி அதிகரிப்பு. *UPI வாயிலாக தனியார் வங்கிகள் கடன் வழங்கும் சேவையை தொடங்க உள்ளன. *கடந்த ஜூலை – செப்டம்பர் வரை, 10.39 லட்சம் பயணியர் வாகனங்கள் விற்பனை. *சர்க்கரை குறைந்தபட்ச விற்பனை விலையை அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனை. *அமெரிக்காவிற்கான இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 8.58% சரிவை கண்டுள்ளது.


