News April 29, 2025
இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியிலும் மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News April 29, 2025
பிரபல நடிகர் பிரகாஷ் பெண்டே காலமானார்!

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் மராத்தி சினிமாவில் மிக பிரபலமாக இருந்த பிரகாஷ் பெண்டே(82) காலமானார். அவர் பாலு, சாட்டக் சாந்த்னி, நடே ஜாட்லே டான் ஜீவ்னே போன்ற மாபெரும் மராத்தி வெற்றி படங்களை இயக்கி, நடித்தும் இருக்கிறார். சினிமா துறையை தாண்டி இவர் ஒரு சிறந்த ஓவியரும் கூட. மும்பையிலுள்ள பல்வேறு கேலரிகளில் இவரின் ஓவிய கண்காட்சி நடத்தப்பட்டுள்ளன. #RIP.
News April 29, 2025
ஏன் பயப்படுறீங்க சசி தரூர்? விளாசிய காங். தலைவர்

மோடியை புகழும் சந்தர்ப்பத்திற்காக சசி தரூர் காத்துக்கிடக்கிறார் என காங். தலைவர் உதித் ராஜ் விமர்சித்துள்ளார். பஹல்காம் தாக்குதலை அடுத்து, அரசின் பாதுகாப்பு செயல்பாடுகளை காங். உள்பட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், காங். MP சசி தரூர் மோடி அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இந்த நிலையில், ED, CBI, IT ஏஜென்சிகளை கண்டு சசி தரூர் பயப்படுகிறார் என உதித் ராஜ் விமர்சித்துள்ளார்.
News April 29, 2025
அமெரிக்காவின் துரோகம்: மார்க் கார்னி வெற்றிப் பேச்சு

அமெரிக்க துரோகத்தை கனடா மக்கள் ஒருபோதும் மறக்க வேண்டாம் என அந்நாட்டின் <<16252207>>PM <<>>மார்க் கார்னி கூறியுள்ளார். அதோடு, கனடாவை வலுவாக்க மக்கள் உத்தரவிட்டுள்ளனர் எனக் கூறிய PM, வரவுள்ள நாள்களும், மாதங்களும் மிகுந்த சவாலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். பெரும்பான்மையை நெருங்காவிடிலும், சிறு கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியை அமைக்கும் நிலையில் லிபரல் கட்சி உள்ளதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.