News April 29, 2025
இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியிலும் மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News November 25, 2025
MRP-ஐ விட அதிக விலையா? இதை உடனே செய்யுங்கள்

பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட மக்கள் அவசரமாக பயணிக்கும் இடங்களில் MRP-ஐ விட அதிக விலையில் சிலர் பொருள்களை விற்பர். அவசர கதியில் நாமும் அதிக பணம் கொடுத்து வாங்கியிருப்போம். ஆனால், இனி இந்த தவறை செய்யாதீர்கள். எந்தவொரு இடத்திலும் MRP-ஐ விட அதிக விலைக்கு பொருள்களை விற்பனை செய்தால் ‘1915′ என்ற நுகர்வோர் ஹெல்ப்லைனுக்கு கால் செய்து புகாரளிக்கலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News November 25, 2025
8 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், குமரி, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, தேனி, நீலகிரி, கோவை ஆகிய 8 மாவட்டங்களில் காலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் ஜாக்கிரதையாக செல்ல வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
News November 25, 2025
இயக்குநராகும் ஆசையில் கீர்த்தி ஷெட்டி

வா வாத்தியார், ஜீனி, LIK என அடுத்தடுத்து கீர்த்தி ஷெட்டியின் படங்கள் ரிலீஸாகவுள்ளன. இந்நிலையில், தனக்கு இயக்குநர் ஆகும் ஆசை அதிகரித்துக் கொண்டே வருவதாக கீர்த்தி தெரிவித்துள்ளார். ஆனால், தான் சினிமாவில் நுழைந்தபோது ஒரு படம் எப்படி தயாராகிறது என்றே தெரியாது எனவும் கூறினார். டைரக்ஷன் சவாலான வேலை என்ற அவர், இந்த சவாலை தனது படங்களின் இயக்குநர்களிடம் தொடர்ந்து கற்று வருகிறேன் என்றார்.


