News November 23, 2024

இன்று, நாளை மழைக்கு வாய்ப்பு

image

தெற்கு அந்தமானில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது வடமேற்கில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக, இன்றும், நாளையும் மிதமான மழையும், நவ.25இல் இருந்து 4 நாளைக்கு பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 25ஆம் தேதி மயிலாடுதுறை நாகை, தஞ்சை, திருவாரூரில் மிக கனமழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.

Similar News

News December 3, 2025

இன்று 11 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

image

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று IMD கணித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியே சென்றால் குடையை தவறாமல் கையுடன் எடுத்துச் செல்லுங்க மக்களே!

News December 3, 2025

இப்படியெல்லாம பூச்சிகள் இருக்கிறதா?

image

ஆச்சரியமான இந்த உலகில் பல்வேறு விசித்திரமான உயிரினங்கள் உள்ளன. குறிப்பாக பூச்சி இனங்கள், இப்படியெல்லாம் இருக்கின்றதா என்று நம்மை வியப்படைய செய்கின்றன. இந்தப் பூச்சிகள், இயற்கையாகவே இலைகள், பூக்கள், குச்சிகள் போன்ற தோற்றத்தில் உள்ளன. இந்த விசித்திரமான பூச்சிகள் என்னென்னவென்று, மேலா போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News December 3, 2025

2-வது ODI: தொடரை கைப்பற்றுமா இந்தியா?

image

இந்தியா, தென்னாபிரிக்கா இடையிலான 2-வது ODI ராய்பூரில் இன்று நடைபெறுகிறது. ராஞ்சியில் நடந்த முதல் ODI-ல் 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்த இந்தியா, இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில், தொடரை சமன் செய்வதற்காக தீவிர வலைப்பயிற்சியில் SA வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். பேட்டிங்கில் வலுவாக காணப்படும் IND, பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

error: Content is protected !!