News June 26, 2024
இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 1 மணி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News October 17, 2025
ஈரத்தில் கைகளில் சுருக்கங்கள் ஏற்படுவது ஏன்?

சிறிது நேரம் தண்ணீரில் கையை வைத்திருந்தாலும், தோல்கள் சுருங்கி காட்சியளிக்கும். இதனை Pruney fingers என்பார்கள். வலிமையான தோல்கள் என்ற போதிலும், விரல்களின் தோலில் தண்ணீர் மிக எளிதாக நுழைவதால், இந்த சுருக்கங்கள் தோன்றுகின்றன. தோலில் ஏற்படும் இந்த சுருக்கங்கள் உங்களுக்கு ஒரு சில நன்மைகளையும் தருகிறது. ஆம், இந்த சுருக்கமான விரல்களால், ஈரமான பொருள்களின் மீதான பிடிமானம் அதிகரிக்கிறது.
News October 17, 2025
சற்றுமுன்: MLA சிவாஜிராவ் கார்டிலே காலமானார்

மகாராஷ்டிராவின் ரஹுரி தொகுதி MLA-வும், முன்னாள் அமைச்சருமான சிவாஜிராவ் கார்டிலே(67) மாரடைப்பால் காலமானார். பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், 2009, 2014 மற்றும் 2024 தேர்தல்களில் ரஹுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியவர். சிவாஜிராவ் கார்டிலே மறைவுக்கு மகாராஷ்டிரா CM பட்னாவிஸ், DCM அஜித் பவார், NCP MP சுப்ரியா சுலே உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். #RIP
News October 17, 2025
கருணைக்கொலையை அனுமதிக்கும் சட்டம் வந்தது

உருகுவேயில் தீராத மனநலம், உடல்நலம் பிரச்னைகள் உள்ளவர்களை கருணைக்கொலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, டாக்டர்கள் செய்யும் கருணைக்கொலை அனுமதிக்கப்படும். ஆனால், நோயாளியே மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்ள கூடாது. மேலும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கருணைக்கொலையை தேர்ந்தெடுக்க விரும்பினால், டாக்டர்களின் அனுமதியை அதற்கு பெற வேண்டும். இதுபற்றி என்ன நினைக்கிறீங்க?