News June 25, 2024

அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை கன்னியாகுமரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News November 23, 2025

குமரி: 8 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

image

மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் ஷகீலா இவருக்கு 19 ஆண்டுகளாக குழந்தை இல்லை. களியக்காவிளை பகுதியில் உள்ள கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 5 நாட்களாக உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு அங்கு அவர் நேற்று உயிரிழந்தார். 8 மாத கர்ப்பிணியான அவர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை.

News November 23, 2025

குமரி: காசி தமிழ் சங்கமம் சிறப்பு ரயில் அறிவிப்பு

image

காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்வை முன்னிட்டு, பயணிகளின் கூடுதல் கூட்டத்தைக் கையாளும் வகையில், கன்னியாகுமரி மற்றும் பனாரஸ் (காசி) இடையே (ரயில் எண் 06001/06002) சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. காசி தமிழ்ச் சங்கம நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் பயணிகள் இந்த சிறப்பு ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News November 22, 2025

பேச்சிப்பாறை அணையில் 500 கன அடி உபரி நீர் திறப்பு

image

குமரி மாவட்டத்தில் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றான பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது அணையில் 44 அடி நீர்மட்டம் உள்ளதை தொடர்ந்து அணையில் இருந்து இன்று (நவ.22) 500 கன அடி உபரி நீர் அவசரகால மதகுகள் மூலம் திறந்து விடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். இதனால் கால்வாய் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!