News June 25, 2024
அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை கன்னியாகுமரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 21, 2025
குமரி: கண்காணிப்பில் சிறப்பு ரோந்து படைகள்

கிறிஸ்மஸ் பண்டிகை டிச.25 அன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 5 துணை சரகங்களிலும் சிறப்பு ரோந்து படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட எஸ்பி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கூட்ட நெரிசலில் திருட்டுகள் நடைபெறுவதை தடுக்க சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
News December 21, 2025
குமரி: இலவச வீட்டு மனை வேண்டுமா?..

குமரி மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News December 21, 2025
நாகர்கோவில்: எம்.எல்.ஏ உட்பட 180 பேர் மீது வழக்கு!

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயிர் நீத்த பூரணசந்திரன் ஆன்மா சாந்தியடைய வேண்டி நாகர்கோவில் வடசேரி, கோட்டார், அஞ்சுகிராமம் உட்பட மாவட்டத்தில் 8 இடங்களில் தீபங்கள் ஏற்றி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி பாஜக உறுப்பினர் எம் ஆர் காந்தி உட்பட 180 பேர் மீது காவல்துறையினர் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


