News April 17, 2025
9 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

9 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதேபோல், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக IMD கணித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News December 4, 2025
திணறும் இண்டிகோ: பயணிகள் அவதி!

விமான பணியாளர்களின் புதிய பணி நேர வரம்பு, ஏர்பஸ் A320 பிரச்னை, பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், நேற்று இண்டிகோவின் 150 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கி தவித்தனர். இதற்கு மன்னிப்பு கோரியுள்ள இண்டிகோ நிறுவனம், நிலைமையை சீர்செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக விளக்கமளித்துள்ளது. நாளை (டிச.5) வரை மேலும் விமானங்கள் ரத்தாகலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
News December 4, 2025
இவரை போல வேறொருவர் உண்டோ!

மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை முன்னின்று வழிநடத்திய போதிலும், எப்போதும் எளிமையானவராகவே AVM சரவணன் இருந்துள்ளார். அவர் கை கட்டாமல் நிற்கும் ஒரு போட்டோவை கூட உங்களால் பார்க்க முடியாது. அதே போல, வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் அவரின் டிரேட்மார்க். பழகுவதற்கு இனிமையானவர், பந்தா காட்டாத பண்பானவர், உழைப்பில் கடிகாரத்தை முந்துபவர் என இவரது பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். #RIP
News December 4, 2025
உஷாரான செங்கோட்டையன்.. தவெகவில் 3 தலைவர்கள்?

EX MLA சின்னசாமியுடன் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோதே, இடையில் நுழைந்த செந்தில் பாலாஜி, அவரை தட்டித்தூக்கி திமுகவில் இணைத்ததாக கூறப்படுகிறது. இதுபோல் இனி நடந்துவிடக் கூடாது என உஷாரான செங்கோட்டையன், சென்னை, டெல்டா, கொங்குவை சேர்ந்த 3 முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், அவர்கள் விரைவில் தவெகவில் இணையவிருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.


