News April 17, 2025

9 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

9 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதேபோல், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக IMD கணித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்ட் பண்ணுங்க.

Similar News

News December 1, 2025

பெரம்பலூரில் உள்ள புனித குளம் பற்றி தெரியுமா?

image

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவில் மகாமகக் குளம் அமைந்துள்ளது. இக்குளத்தில் மகாமகம் தினத்தன்று ஒருமுறை இறங்கி வழிபட்டால், முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். மேலும், ஒருமுறை குளத்தை வலம் வந்தால் 101 முறை அங்கபிரதட்சணம் செய்த புண்ணிய பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. நீங்கள் இந்த குளத்திற்கு சென்று வழிபட்டது உண்டா? கமெண்டில் தெரிவிக்கவும். SHARE

News December 1, 2025

BREAKING: அமளியால் முடங்கிய லோக்சபா

image

எதிர்க்கட்சி MP-க்களின் அமளியால் லோக்சபா பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. SIR நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, TMC, SP உள்ளிட்ட கட்சிகளின் MP-க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். முன்னதாக, குளிர்கால கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என <<18436891>>PM மோடி<<>> வலியுறுத்தியிருந்தார்.

News December 1, 2025

துரோகத்தின் சம்பளம் மரணம்.. மனைவி சடலத்துடன் Selfie!

image

இறந்த மனைவியின் உடலுடன் Selfie எடுத்து, ‘துரோகத்தின் சம்பளம் மரணம்’ என கணவர் ஸ்டேட்ஸ் வைத்த சம்பவம் அதிரவைத்துள்ளது. நெல்லையை சேர்ந்த பாலமுருகன், ஸ்ரீபிரியாவிற்கு திருமணமான நிலையில், ஸ்ரீபிரியா வேறொருவருடன் பழகுவதாக பாலமுருகன் குற்றம்சாட்டினார். இதனால், ஸ்ரீபிரியா கோவையிலுள்ள ஹாஸ்டலில் தனியாக வசித்து வந்துள்ளார். அவரை அழைக்க சென்ற போது நடந்த தகராறில், பாலமுருகன் ஸ்ரீபிரியாவை கொலை செய்துள்ளார்.

error: Content is protected !!