News April 11, 2025
6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

திருவள்ளூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்(MET) கணித்துள்ளது. நள்ளிரவில் சென்னை எண்ணூரில் 4 செ.மீ, திருவள்ளூர் செங்குன்றத்தில் 2 செ.மீ மழையும் பெய்துள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 20, 2025
கவர்னர் விவகாரத்தில் SC-யின் 2 மாறுபட்ட விளக்கங்கள்

*மாநில சட்டப்பேரவையின் மசோதா மீது முடிவெடுக்க 1 முதல் 3 மாதம் கெடு விதித்தது ஏப்.8-ல் SC வழங்கிய தீர்ப்பு. இன்றைய தீர்ப்பில் காலக்கெடு நீக்கப்பட்டது *பிரிவு 201-ன் கீழ் ஜனாதிபதிக்கு இருந்த காலக்கெடுவும் ‘நியாயமான காலத்துக்குள்’ என மாற்றப்பட்டது. *காலக்கெடுவுக்குள் முடிவு எடுக்கவில்லை எனில், ஒப்புதல் அளித்ததாக கோர்ட் முடிவு செய்யும் என்பதும் தற்போது நீக்கப்பட்டுள்ளது.
News November 20, 2025
நீங்கள் எதை இழந்து வருகிறீர்கள்?

இத்தனை வருடமாக வேலைக்கு செல்லும் நீ எவ்வளவு சேமித்து வைத்துள்ளாய்? என்ற கேள்வி, நீங்கள் வேலை பார்க்க தொடங்கிய அடுத்த சில ஆண்டுகளில் கேட்கும் ஒன்றாகவே இருக்கும். பணத்தை சேர்க்க முடியாததற்கு நம்மில் பல காரணங்கள் இருக்கலாம். அதேபோல், வருமானத்தை நோக்கி பயணிக்கும் நேரத்தில் உறவுகள், நண்பர்கள், சுப நிகழ்வுகள், திருவிழாக்கள் என பலவற்றை இழக்கிறோம். உங்கள் வாழ்க்கை ஓட்டத்தில் நீங்கள் இழந்தது என்ன?
News November 20, 2025
BREAKING: திமுகவுடன் கூட்டணி.. உறுதியாக அறிவித்தார்

திமுக – காங்., கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அண்மைக்காலமாக செய்தி வெளியாகி வருகிறது. மேலும், தவெக- காங்., இடையே பேச்சு நடப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தியா கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது என செல்வப் பெருந்தகை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


