News April 14, 2025
5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்(MET) கணித்துள்ளது. மேலும், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேநேரம் நாளை வரை ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசும் எனவும் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதமும் இருக்கும் நிலையில் அசெளகரியம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News April 15, 2025
ஒரு டாய்லெட் பிரச்னையால் ₹29.16 கோடி செலவு

போயிங் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் டாய்லெட்டில் சிக்கிக் கொண்டுள்ளார். டாய்லெட்டின் தாழ்ப்பாள் பழுதானதால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரித்த USA விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், அனைத்து போயிங் விமானங்களின் பிரச்னைகளை சரி செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து ₹29.16 கோடி செலவில் 2,612 விமானங்களின் டாய்லெட் தாழ்ப்பாளை மாற்ற போயிங் முடிவு செய்துள்ளது.
News April 15, 2025
சனி வக்ர பெயர்ச்சி: ராஜ யோகம் அடிக்கும் 3 ராசிகள்

சனி பகவான், வரும் ஜூலை 13-ல் மீன ராசியில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் நேர்மறை பலன்கள் அடையும் ராசிகள்: *கன்னி: வேலை, தொழிலில் முன்னேற்றம். காதல், திருமண வாழ்க்கை சிறக்கும். வீடு, வாகன யோகம் *மீனம்: ஆரோக்கியம், ஆற்றல் அதிகரிக்கும். செல்வாக்கு கூடும். வேலை, தொழிலில் முன்னேற்றம் *மகரம்: அதிர்ஷ்டம் சாதகமாகும். வெற்றி கிடைக்கும். வாய்ப்புகள் தேடிவரும், மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும்.
News April 15, 2025
ஐநாவில் சட்டமேதையின் பிறந்தநாள் கொண்டாட்டம்

நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நேற்று அம்பேத்கரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்தர தூதரகம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இதில் பேசிய மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளும் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடுவதாக தெரிவித்தார். அதேபோல், நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், ஏப்ரல் 14ஆம் தேதியை அம்பேத்கர் தினமாக அறிவித்தார்.