News May 8, 2025
27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி-மின்னலுடன் மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது. மிதமான மழை: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம். லேசான மழை: சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், கரூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தென்காசி, விருதுநகர்.
Similar News
News December 1, 2025
சென்னை: ஊர்க்காவல் படையில் சேர நல்வாய்ப்பு!

சென்னை , பெருநகர ஊர்காவல் படைக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வயது 18-50-க்குள் இருக்கும் ஆண்,பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். தகுதி உடையவர்கள், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஊர்காவல் படை தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று, டிச.15க்குள் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு, 91760 99249 / 74186 81700 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
News December 1, 2025
சமந்தாவின் கணவர்.. யார் இந்த ராஜ் நிடிமொரு?

<<18437853>>சமந்தாவை<<>> கரம் பிடித்துள்ள ராஜ் நிடிமொரு திருப்பதியில் பிறந்தவர். இயக்குநர் DK உடன் இணைந்து பாலிவுட்டில் பல வெற்றி படங்களை ராஜ் இயக்கியுள்ளார். 2009-ல் ’99’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த ராஜ், தொடர்ந்து ‘Go Goa Gone’, ‘A gentleman’ போன்ற படங்களை இயக்கினார். சமந்தா நடித்த ‘The Family man’ சீரிஸ், ‘Citadel: Honey Bunny’ போன்ற வெப் தொடர்களும் அவர் இயக்கியதுதான்.
News December 1, 2025
நெல் ஈரப்பத அளவை TN அரசு உயர்த்த சொல்வது ஏன்?

மத்திய அரசின் தரக்குறியீட்டின்படி, நெல் கொள்முதலுக்கான ஈரப்பதம் 17% இருக்கவேண்டும். ஆனால், தற்போது பருவமழை காலம் என்பதால் குறுவை நெல்லின் ஈரப்பதம் 17% விட அதிமாக இருக்கும். நிர்ணயிக்கப்பட்ட அளவை விட நெல் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் அது தரமற்றதாக கருதப்படும். எனவே விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் ஈரப்பத அளவை 22% வரை உயர்த்த TN அரசு கோரிக்கை வைத்துவருகிறது.


