News July 15, 2024
26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 26 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி தேனி, சேலம், நீலகிரி, கோவை, வேலூர், மதுரை, கடலூர், திருப்பூர், சென்னை, விழுப்புரம், தென்காசி, விருதுநகர், காஞ்சி, சிவகங்கை, ராமநாதபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, நெல்லை, கள்ளக்குறிச்சி, குமரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
Similar News
News November 23, 2025
JUST IN: குமரி மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை மேற்கண்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை எல்லோரும் தெரிந்துகொள்ள SHARE செய்யுங்க.
News November 23, 2025
₹105 கோடி.. தமிழ் சினிமாவில் வரலாறு படைத்த ‘ஜனநாயகன்’

‘ஜனநாயகன்’ படத்தின் தியேட்டர் உரிமம், 5 விநியோகஸ்தர்களுக்கு பிரித்து விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மொத்தம் ₹105 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகவும், தமிழ் சினிமா வரலாற்றில், ஒரு படத்தின் தியேட்டர் உரிமம் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்கப்படுவது இதுவே முதல்முறை என்றும் சினிமா வட்டாரங்கள் ஆச்சரியத்துடன் தெரிவிக்கின்றன. இது விஜய்யின் கடைசி படம் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
News November 23, 2025
பிங்க் டால்பின் பற்றி தெரியுமா?

அமேசான் நதியின் ஆழத்தில் நீந்தி திரியும் ஒரு அதிசயம் தான் பிங்க் டால்பின். இது ‘போட்டோ’ என்றும் அழைக்கப்படுகிறது. பிறக்கும்போது சாம்பல் நிறத்தில் உள்ள இவை, வளர வளர பிங்க் நிறமாக மாறுகின்றன. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், உற்சாகமடையும் போது இவை மேலும் பிரகாசமான பிங்க் நிறமாக மாறுமாம். மற்ற டால்பின்களை விட புத்தியசாலியானது என கூறும் நிபுணர்கள், இவை அழியும் நிலையில் உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.


